பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119



கரிசலில் லாத காட்டில்
களங்கமில் லாது ழைத்து
விர சமில் லாமல் வாழும்
விவசாய மக்கள் வேண்ட,
அரசியல், அறிவி யல், மற்
றழல், தொழ லியல்கள், -
யாவும் பரிசிலில் லாமற் பெய்தாள்,
பாமரர் செவியில் பாவை !

கழி மூடி மலர்ந்த கன்னிக்
கமலத்தின் வாய்ச்சொல் தேனை
விழிமூடிப் படுத்த வாறே
விரும்பிநான் நுகர்ந்தெ ழுந்தேன்,
பழிமூடப் பட்ட பார்க்கோர்
பரிகாரம் பண்ணப் பைய
வழி மூடுந் தடைகள் யாவும்
வழித்தெடுத் தெறிய வென்றே!