69
நாவினல் கெட்டோ ருண்டு;
நாட்டினை நாடா தாண்ட
கோவினால் கெட்டோ ருண்டு;
கொள் கையில் லாது பாடும்
பாவினால் கெட்டோ ருண்டு;
'பத வலைப் பாலாய்ப் பண்ணும்
ஆவினால் கெட்டோ ருண்டெ'ன்
ற கிலத்தில் பகர்ந்தா ருண்டோ?
ஆற்றுக்கால் கழனி, தோப்பென்
றமைந்திட விலையா னாலும்,
ஊற்றுக்கால் படிகை, பள்ளம்
உள்ள வூர்ப் புறத்தைப் பார்த்தால்,
'ஏற்றுக்கால் துரவு தோட்டம்’
என்னு மா றேற்ற மெய்த,
மாற்றுக் கால் கோலிக் கொள்ள
மனிதர்கள் மறந்தார் போலும்!
மறிசெல்லும் வழிக ளெல்லாம்
மலர்ச்செடி கொடித்தேன் மாந்தி
வெறிசொல்லி ஞிமிறி சைக்கும்
விளை நில மமைந்தும், வீணாய்க்
குறிசொல்லு வோர், கோ டங்கிக்
குருமார்கள் கோவில் கொண்டு,
நெறிசொல்லு வோர்நே ராத
நிலைமைதென் பட்ட தங்கே!
நலங்கான வேண்டு மென்னும்
நப்பாசை நாட்டத் தில் நாம்
குலங்கான வேண்டா துள்ள
கூலியாட் களையும் கூட்டி,
நிலங்காண நீர்செய் வித்து
நேர்ந்தொன்றிக் கலந்து வாழ்ந்து
பலங்கான வேண்டும், நாரே
பாங்கான கயிறா மாறே!