பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

எண்ணம்சொல் லிவ்வா றன்றென்
னிதயத்தி லிருந்து சிந்தப்
'புண்ணிற்கு மருந்திஃ' தென்றே
புகழ்ந்துகொண் டுற்றார் போக,
'மண்ணைக்கொண் டுள்ள மக்கள்
மயக்கற்ற' தென்றான், நண்பன்.
கண்ணுங்கள் ளுண்ட வண்டாய்க்
'கலப்படங் கண்டே' னென்றே!

பூவிதம் செய்யும், பூத்துப்
புலன் மகிழ் விக்கும் போது!
பாவிதம் செய்யும், பண்பு
படிந்துரு வகமாம் போது!
நாவிதம் செய்யும், நற்சொல்
நயம்பட நவிலும் போது!
சீவிதம் செய நான் சென்று
செப்பிய திஃதப் போதே!