பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

பொம்மையை வைத்துப் போற்றிப்
பொழுதை வீண் செய்தி டாது
செம்மையில் சிந்தை வைத்துச்
செய்வது திருந்தச் செய்து,
தம்மைத்தா மாண்டு கொள்ளும்
தரமுள்ள தக்கார்க் கன்றி
இம்மையே, மறுமை யே-மற்
றெதுவொன்று மெய்தி டாதே!

ஆறுகண் டறிவ றிந்தாங்
கடங்கிவாழ்ந் தமைதி காணார்;
ஊறுகண் டூக்க முற்றாங்
குறுவதை யெதிர்த்து வெல்லார்;
பேறுகண் டும்பே ரில்லார்,-
பிறந்துண்டிங் கிருந்தி றந்து
நீறுகண் டாரிஃ தன்றேல்,
நிலங்கண்டு புதைந்தா ரன்றே!