பக்கம்:புராண மதங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை எனக்கு இல்லை - நானென்ன தேவாலய அரசு செலுத்தி அனுபவமில்லாதவனா........... இங்கு இல்லாவிட்டாலும், மேலுலகில் என்னைப் பூஜித்த பயன் கிடைக்கும் என்று பக்தர்கள் எண்ணிக் கொள்வார்கள். இங்கே அவர்களுக்குள்ள குறையைத் தீர்த்து வைக்காததற் காக என்மீது சீறமாட்டார்கள் என்ற சித்தாந்தம் எனக்குத் தெரியும். நான் பயப்பட்டது அதனால் அல்ல" என்று பெருமூச்சி வருமளவு வேகமாகப் பேசி னார் கருப்பண்ண சாமி. தேவியார் வேகமாகச் சென்று, வாயிலில் பார்த்து விட்டுவந்து, கருப்பண்ணா ! பக்தர் யாருமல்ல, காற்று பலமாக அடித்ததால் மணி ஓசை கேட்டது. பயப் படாதே. சரி, பக்தர்கள் வருகிறார்கள் என்றால் ஏன் பயம் உண்டாகிறது உனக்கு - அதைச் சொல்லு என்று கேட்டார்கள். பக்தர் யாரும் வரவில்லை என்று தெரிந்ததால் தைரியம் பெற்று, தன் பீடத் தில் அமர்ந்து, எதிரே ஒரு பீடத்தில் அமர்ந்த தேவி யிடம் கருப்பண்ணசாமி, விளக்கம் கூறலானார். "தேவி! பக்தர்களால் எனக்கு ஏற்பட்ட ஆபத்தும் சங்கடமும் உனக்கென்ன தெரியும்! வரவர இந்த 'வேலையிலேயே எனக்கு வெறுப்பு வளர்ந்து கொண்டு வருகிறது. தான் செய்த மோசத்தை அரைப்பலம் கற்பூர புகையிலே மறைத்து விடலாம் என்று எண்ணுகிறான். அதற்கு நான் உடந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறான். இவனுடைய பேராசைக்கு நான் துணை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறான் - காரணம் கேட்டால் பெரிய படைய லிட்டிருக்கிறேன் என்று கூறுகிறான். தேவி குறுக்கிட்டு, "இதென்ன புது விஷயமா கருப்பண்ணரே! இப்படிப்பட்ட பக்தர்களை நாம் நெடுங்காலமாகப் பார்த்து, பழகிதானே வந்திருக்கி றோம்" என்று கூறி, கருப்பண்ணசாமி, மனக்கொதிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/24&oldid=1033263" இலிருந்து மீள்விக்கப்பட்டது