உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

27

கேட்கிறீர், தேவீ! நான் அவர்களின் "சாமி" யாம், அதனாலே என்னை வேறே சில பக்தர்கள் கொண்டு போகாமலிருப்பதற்காக, என்னைப் போட்டு பூட்டி வைத்தார்கள். அவ்வளவு 'பக்தி' என்னிடம். வேறு எந்த பக்தனிடமும் நான் பேசிவிடக்கூடாது, அப்படி ஒரு எண்ணம்—" என்றார் கருப்பண்ணர்.

"இதென்ன பைத்தியக்காரத்தனமான எண்ணம்!" என்று தேவி கேலியாகப் பேசினார்கள். "இவர்கள் கண்டதையும் கடியதையும், வேகாததையும் பழுக்காததையும் தின்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், என்னை வந்து கேட்கிறார்களே. தேவி! கருப்பண்ணஸ்வாமி! என்னைக் காப்பாற்றுன்னு , பைத்தியக்காரத்தனம்தானே அது! அதுபோல இதுவும் ஒரு பைத்தியக்காரத்தனம். உண்மையைச் சொல்லப்போனா, தேவீ! அப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனத்தை நாம் வளரவிட்டது தவறு இல்லையா? என் விஷயத்தைக் கேள், தேவி! இந்தப் பக்தர்களுக்கு, நான் தங்களுடைய "சாமி," வேறு யாரும் தங்களுடையதுன்னு 'பாத்தியதெ' கொண்டாடினாலும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு தகுந்தபடியான நிலைமையும் ஏற்பட்டுவிட்டது, நான், நீ, என்று போட்டி போட்டுக்கொண்டு பக்தர்கள் கூட்டம் பெருகுவது கண்டு எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. என் பொறாத வேளை, என் பக்தகோடிகள், இரண்டு கோஷ்டியாகப் பிரிந்து அவர்களுக்குள்ளே தீராத பகை ஏற்பட்டுவிட்டது. அவர்களுடைய பகை எனக்குப் பெரிய ஆபத்தாக வந்து சேரும் என்று நான் கண்டேனா-நான் என் வேலையைக் கவனித்துக்கொண்டு இருந்தேன். வழக்கமாக எனக்கு நடத்துகிற உற்சவத்தெ, நடத்தினார்கள்—எனக்கு மகிழ்ச்சி—தேரும் திருவிழாவும் வீண் வேலை என்றும் ஊருக்குள் போய் சிலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்களே. அவர்கள் பேச்சிலே மயங்கி, எங்கே என் பக்தர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/28&oldid=1697321" இலிருந்து மீள்விக்கப்பட்டது