பக்கம்:புராண மதங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



36 புராண - மதங்கள் மூர்க்கத்தனமாக ஜெர்மானியர் தாக்கும் அந்தப் போர்க் களத்திலே, எதிரிகள் சுரங்க வெடிகளை ஆங்காங்கு அமைத்து வைத்திருந்தனர். நேசநாட்டுப் படையி னரின் ஒரு பிரிவினர் இந்தச் சுரங்க வெடிகளை அப்புறப் படுத்தும் அபாயகரமான வேலையிலே ஈடு பட்டனர், அச் சமயத்திலே, ஒருநாயக், சுரங்கவெடி ஒன்றின் மீது இடறவே, தீப்பிடித்தது, தீர்ந்தது மறுவிநாடி குண்டு வெடிக்கும், அந்த இராணுவ உத்தியோகஸ்தரின் உடல் சுக்குநூறாகிவிடும் அவரோ அதைத் தெரிந்து கொள்ள வில்லை. மரணம் தன்னை தொட்டு இழுப்ப தைத் தெரிந்துகொள்ள வில்லை. என்ன நடந்தது தெரி யுமா ! வீரா! பண்டைப் பெருமையுள்ள தமிழ் மகனொரு வன், அங்கு இருந்தான்! கண்டான் காட்சியை! மிரண் டானில்லை. நமக்கென்னவென்று சும்மா இருக்கவில்லை, நாயக், விலகு, ஓடு , பிழை, சுரங்கவெடி! என்று கூவிடவுமில்லை. ஒரு விநாடியும் தாமதியாது பாய்ந் தான், குண்டின் மீது! அதனைக் கட்டிப் பிடித்தான். குண்டு வெடித்தது. அவன் உடல் சின்னாபின்ன மாயிற்று. உயிரிழக்க இருந்த உத்தியோகஸ்தன் தப்பி னான். வீரன் மாண்டான், வெற்பென்று ஓங்கிற்று அவன் புகழ் தன்னுயிரை விட்டேனும் மற்றொருவன் உயிரைக் காப்பாற்றும் தமிழ்ப் பண்பு, ஆபத்து நேரத் திலே அஞ்சா நெஞ்சம் கொள்ளும் ஆண்மை, தமிழ ருக்கு உண்டு, என்பது காசினோ களத்திலே சில நாட் களுக்கு முன்பு நடைபெற்ற இச் சம்பவத்தால் உல குக்கு விளக்கப்பட்டது. வீரத் தியாகம் புரிந்த அவன், எங்கள் ஜில்லாவாசி! அதை எண்ணும் போதே, புன் னகையும் கண்ணீ ரும் கலந்து வருகிறது. செங்கற்பட் டுக் கடுத்த வாலாஜாபாத் என்ற நகருக்குப் பக்கத் திலே உள்ள குக்கிராமவாசி, கடல் கடந்து சென்று, காசினோகளத்திலே தமிழ் மரபினை உலகுக்கு உணர்த்து வித்தான். அவன் பெயர் சுபேதார் சுப்பிரமணியம். எதிரியின் படைவரிசைக்குப் பின்புறம், விமான மூல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/37&oldid=1033276" இலிருந்து மீள்விக்கப்பட்டது