பக்கம்:புராண மதங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணதுரை கால நிலைமை எங்ஙன முள்ளது? நடக்கும் காலம் என்ன? 'எலும்பைப் பெண் ணுருவாக்கும் காலமா , ஏடு எதிர்நோக்கிச் செல்லும் காலமா, நரி பரியாகும் நேரமா? இல்லை ஆராய்ச்சிக் காலம், அறிவே வழிகாட்டியாக அமைந்துள்ள காலம், கோலாட்சியை மாற்றி குடியாட்சி அமைக்கும் காலம், முதலாளித்வத்தை நீக்கி சமதர்மத்தை அமைக்கும் காலம், புத்தம்புது கருத்துக்கள் பூத்திடும் நேரம், புரட் சிக்காலம்!! இந்தக் காலத்தில் மடாதிபதிகள், இந்நிலையில் இருப்பதெனில், மக்கள் மனதில் அவர்பால் மதிப்பும் அன்பும் ஒழுகுமென்றா கூற முடியும். அங்ஙனங் கூறல் உண்மையை மறைப்பதாகும். பட்டணப் பிரவேசத் திற்காகப் பல்லக்கில் பரிமளகந்த மணிந்து, இரவைப் பகலாக்கும் விதத்தில் எண்ணற்ற விளக்குகள் புடை குழ மக்கள் முன்பு பவனி வரும் "தம்பிரான்கள்" எங் ஙனம் மக்களால் போற்றப்பட முடியும். தம்பிரானின் தங்க மேனியைக் கண்டு தமது உட லில் உள்ள ஓடிசலையும் மக்கள் காண்பரேல் சைவத் தின் மாண்பு தம்பிரானுக்குச் சென்றதே யன்றி நமக் குக் காணோமே என்று ஏங்காமலிரார். சைவத்தைப் பரப்ப வந்தவர் தங்கப் பல்லக்கில் முத்து வடமும், பவள மோதிரமும், தங்கத் தோடுகளும், வெண்பட் டாடையும் உடுத்திப் பவனிவர, உழைத்த உழுத, அறுத்த, பிளந்த கைளும், அறுத்த கால்களும், ஒட் டிய வயிரும் படைத்த மக்கள் கண்டு உளத்தில் என்ன எண்ணுவர். சைவத்தின் சிறப்பே சிறப்பு என்று களிப்பரா "தோடுடைய செவியின் -- விடை ஏறி" தம்பிரான் களை இங்ஙனம் நடக்கும்படி "அருள் பலிக்க" நமக்குக் காடு போல் வீடும், எலும்புக் கூடு போல் குடும்பத்தின ரும் இருக்கத்தான் அருளினார் போலும்! என்னே இவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/56&oldid=1033295" இலிருந்து மீள்விக்கப்பட்டது