பக்கம்:புராண மதங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை 65 அஞ்சுவது யாது மில்லை, அஞ்ச வருவது மில்லை, அன்பரே! அரன் உம்மையும் காப்பாற்றுவார் ! எம் மையும் வாழ வைப்பார் ! அஞ்சேல்! அஞ்சேல்! என்று கூறுவது போன்ற காட்சிகள் அவர் மனக்கண் முன் தோன்றித் தோன்றி அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்த போதிலும், இன்று நாட்டிலுள்ள பெரும் பாலோர் வறுமையால் வாடி வதங்கிக் கிடப்பதையும், அதேபோது, சமயத்தின் பேரால் பண்டாரச் சந்நிதிகள், நிழலிலேயே இருந்து கொண்டு - நிமிராமல் - குனியா மல்- வெட்டாமல் - கொத்தாமல் - பாடு படாமல் - பாலும் பழமும் சாப்பிட்டுக் கொண்டு - பல்லக்குச் சவாரி செய்து பவனி வருவதையும், இனி நாடு பொறுத் துக்கொண் டிராது என்பது மட்டும் உறுதி. 0 0 0| அம்மையின் மூக்குத்திருகு, மூன்றரை இலட்சம் ரூபாய் பெருமானம் உள்ளது. ஜயனின் வைரமுடி, முப்பது இலட்சமாமே! ரங்கனின் முத்து அங்கி, சாமான்யமான விலையா! திருடனிடம் கொடுத்தால் கூட, ஐம்பது இலட்சம் தருவானே! பாண்டுரங்கனின் மார்பிலே உள்ள மாலையில் புதைத்திருக்கும் பச்சை - உள்ளங்கை அகலமிருக்கும் உலகிலேயே அதுபோன்ற பச்சை கிடையாது - விலை, இன்னமும் யாரும் மதிப்புப் போட்டதே இல்லை! திருமலை திருப்பதியிலே உள்ள திவ்யாபரணங்கள் மட்டும், எத்தனையோ கோடி ரூபாய் விலை உள் ளனவாம். தில்லையில் மட்டுமென்ன குறைவா! திருவண்ணா மலையிலே, அண்ணாமலையாரிடம் உள்ளது கொஞ்சமா ! 0 0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/66&oldid=1033305" இலிருந்து மீள்விக்கப்பட்டது