பக்கம்:புராண மதங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை 75 முறைப்படி நடந்துகொள்ளச் செய்வார் என்று நம்பி னர் - அதற்கேற்றபடியே நடந்துகொண்டனர். ஆனால் அறிவுத் தெளிவு அங்கெல்லாம் ஏற்பட்டுக் , கற்பனை கள், கட்டுக்கதைகள் ஆகியவற்றை மறந்து, காரண விளக்கத்தில் கவலை செலுத்தி, ஆராய்ச்சி மனப்போக் கினராயினர். இங்கு மட்டுந்தான் இன்றும் அந்தப் பழைய நம் பிக்கை பழுதுபடாது இருக்கிறது. காரணம், அந்தப் பழைய நம்பிக்கையை அப்படியே வைத்துப் பாதுகாப் பதால் இலாபமடையும் சூதுமதியினர் இங்கு இருப் பதுதான். "பஞ்ச பூதங்களாம் அப்பு, பிருதுவி, தேயு, வாயு, ஆகாயம் என்பனவற்றைப் பற்றி- என்று ஆரம் பித்து பஜனை பாடுவதே போதும் என்று நாம் இருந்து விட்டோம். மற்றவர்களோ, அவைகளை ஆராயத் தொடங்கி, பல அரிய காரியங்களைச் சாதித்தனர்-- இன்றும் சாதித்த வண்ணம் உள்ளனர். இவ்வளவு பெரிய இயற்கைக் கோளாறையும் கண்டு அவர்கள் மிரண்டு, மனதை மறக்கடித்துக் கொண்டதில்லை. எவ்வளவு சிறிய சம்பவத்தையும், ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. கோளங்களையும் ஆராய்கிறார்கள், கொசுவைப் மற்றியும் ஆராய்ச்சி நடத்துகிறார்கள். வானத்திலே வட்டமிட்டுப் பார்க்கிறார்கள், கட லுக்குள்ளே மூழ்கிப் பார்க்கிறார்கள் - எங்கெங்கு என் னென்ன காட்சிகள் உள்ளன, கருத்துக்கள் கிடைக்கின் றன என்று கண்டறிய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/76&oldid=1033315" இலிருந்து மீள்விக்கப்பட்டது