பக்கம்:புராண மதங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை டார்! சூரியதேவன், அந்தச் சாயாதேவியுடன் சரச்சல் லாபமாகவே இருந்து வந்தார் - வேறு மங்கை என்று அறியாமலேயே. சிலகாலம் சென்றபிறகே, தன் சரச சல்லாபத் துக்கு இடமளித்து வரும் இன்பவல்லி, சஞ்சாதேவி அல்ல, சாயாதேவி, என்பது சூரிய தேவனுக்குத் தெரிந்த தாம். தெரிந்ததும், தேவியைத் தேடிக்கொண்டு சென் றார் - அம்மையார், யாது காரணம் பற்றியோ பெண் குதிரை உருவெடுத்து, எதோ ஓர் மலைச்சாரலில், தவ மிருந்து கொண்டிருந்தாராம். கண்டதும் சூரியதேவன், தேவி இது என்ன கோலம் ! என்னை விட்டுப் பிரிந்த காரணம் என்ன?" என்று கேட்டாரா? இல்லை! அவரும் உடனே, ஆண்குதிரை உருவெடுத்து, குதிரை யம்மை யைத் துரத்தினார் ! அது வெறும் வேட்டையாகவில்லை - காதல் விளையாட்டாகி, சூரியக் குதிரையின் நாசியி லிருந்து வீரியம் ஒழுக, அசுவினி தேவர்கள் பிறந்தனர் ! இது, நம் நாட்டுச் சூரியன் ! ரிஷி சிரேஷ்டர்களும் தவமுனிவரும், வேத வித்தகரும், கண்டறிந்த உண்மை ! ஆஹா! ஊஹு! பாட, அரம்பை ஊர்வசி ஆட, ஒற்றைச் சக்கரத் தேரேறி, சுற்றி வருபவர், சூரிய தேவன் ! இந்த உண்மையைக் கூறினவர்கள், சாமான்யர்க' ளென்று அல்ல, சகலகலா வல்லவர்கள் என்று மட்டு மல்ல, மும்மலமடக்கி மூலத்தைக் கண்டறிந்து, கடவு ளுடன் தோழமை பூண்ட தூயவர்கள், என்று கூறப் படுகிறது, ஊனக் கண்களுக்குப் புலனாகாத உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/92&oldid=1033331" இலிருந்து மீள்விக்கப்பட்டது