பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

புறநானூறு - மூலமும் உரையும்



72. இனியோனின் வஞ்சினம்!

பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: காஞ்சி. துறை: வஞ்சினக் காஞ்சி.

(சிறு சொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை வென்று அகப்படுத்துவேன்: அது செய்யேனாயின் இன்னவாகுக என வஞ்சினம் உரைத்தலால் வஞ்சினக் காஞ்சி ஆயிற்று. இக் காலத்தே புலவர் தலைவராக விளங்கியவர் மாங்குடி மருதனார் என்பது இச் செய்யுளால் விளங்கும்)

'நகுதக் கனரே, நாடுமீக் கூறுநர்; இளையவன் இவன் என உளையக் கூறிப், படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும், தேரும், மாவும், படைஅமை மறவரும், உடையம் யாம்' என்று - 5

உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்குஅகப் படேஎன் ஆயின் பொருந்திய என்நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது 10

கொடியன்எம் இறை எனக் கண்ணி பரப்பிக், குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக! ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக, - உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் 15

புலவர் பாடாதுவரைக என் நிலவரை புரப்போர் புன்கண் கூர, இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

‘இவன் இளையவன்! யாம் பெரும்படை உடையேம் எனப் புல்லிய வார்த்தைகள் பலவும் கூறிப் போரிட வருகின்றனர். , இவரைச் சிதறியோடுமாறு போரிட்டு இவர் முரசையும் கைப் பற்றுவேன். இன்றேல், கொடியவன் எனக் கண்ணிர் பெருக்கிக் குடிமக்கள் பழி தூற்றம் கொடுங்கோலன் என்று இகழ்வாராக; மாங்குடி மருதன் முதலாகப் போற்றும் பெரும் புலவர் பலரும் என்னைப்பாடாது என் நாட்டை விட்டு நீங்குக! என் சுற்றும் துயர் மிக்கதாகுக! இரப்பவர்க்குக் கொடுக்கவியலாத வறுமையுடையவ னாக யான் ஆகுக! (இங்கே, குடியோம்பல், புலவர்ப் போற்றுதல், சுற்றம் காத்தல், இரவலர்க்கு உதவுதல் ஆகியவை மன்னனின் முதன்மையான கடமைகள் எனக் கூறப்பட்டன)