பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

3



["பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நால்வேத நெறி திரியினும், திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலீயரோ” என்றதனாற் செவியறிவுறுஉ ஆயிற்று. இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றி நிலீஇயரோ என்றதனால், வாழ்த்தியல் ஆயிற்று.

'பகை நிலத்து அரசர்க்குப் பயந்தவாறு கூறிப், பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி, நடுக்கின்றி நிற்பாய்’ என

அச்சந்தோன்றக் கூறி ஒம்படுத்தலின், 'ஓம்படைவாழ்த்து ஆயிற்று

என்பர் நச்சினார்க்கினியர் (தொல், புறம்சூ36 உரை)]

மண் திணிந்த நிலனும்,

நிலம் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்,

வளித் தலைஇய தீயும், -

தீ முரணிய நீரும், என்றாங்கு 5

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அளியும் உடையோய்! நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் வெண்தலைப்புணரிக்குடகடல் குளிக்கும் 10

யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந! வான வரம்பனை நீயோ, பெரும! அலங்குளைப் புரவி ஐவரொடு சினை.இ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப் 15

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்; பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நாஅல் வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி, நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச், - 20 சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை, அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட்டு இமயமும், பொதியமும் பான்றே! பாரதப் பெரும்போர் நடந்த நாளிலே, உதியஞ் சேரலாதன் இந் நாவலந்தீவின் பேரரசன் ஆவான். கதிரவன் தோன்றும் கீழ்க்கடலும், மறையும் மேற்கடலும், இடைப்பட்ட புதுவருவாய் குன்றாத பெருநிலப்பரப்பும் அவனுக்கே உரியன. பொறுமை,