பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

புறநானூறு - மூலமும் உரையும்


யாது?’ என யாம் வினவ, எதுவுங் கூறுதலன்றிச் சென்றும் விட்டனன். அவன் நாடும் பேரும் பின்னர் வழியிடையே பிறர்பிறர் கூறக் கேட்டேம். அவன்தான், மிக்க புகழும் பெருநாடும் உடையோனான, தோட்டி மலைக்குத் தலைவனான, நள்ளி என்பான்!

சொற்பொருள்: 41. கூதிர்ப்பருந்தின் - இளவேனிற் காலத்துப் பருந்தினது. 2. பாறிய சிதாரேன் - துணியாகிய சீரையை உடையேனாய். பலவு முதல் - பலாவடி 4, உயங்கு படர் வருத்தமும் - எனது ஒய்ந்த செலவாலுளதாகிய வருத்தத்தினையும். 9, இழுதின் அன்ன - நெய்யிழுது போன்ற கொழுங்குறை - கொழுவிய தடியை. 10.மயங்கிய-மயங்கிப்போகிய,11.ஒய்யென கடிதாக ஞெலி தீயின் - கடைந்த தீயால். 15. நீங்கி - தீர்ந்ததாக 16. நன்மரன் நளிய - நல்ல மரச் செறிவையுடைய 21. மடைசெறி கொளுத்துச் செறிந்த, கொளுத்து - ஆபரணங்களின் பூட்டு. 26. குன்றின் - பக்க மலையினையும்.

151. அடைத்த கதவினை!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ. திணை: பாடாண். துறை: இயன்மொழி. குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தனர். அவண் சென்ற புலவர் இளங்கண்டிரக் கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராயினர். ‘என்னை என் செயப் புல்லீராயினர் என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால் இயன்மொழி ஆயிற்று)

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப விண்தோய் சிமைய விறல்வரைக் கவா அன், கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து, புன்தலை மடப்பிடி பரிசிலாகப், பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க் 5 கண்டீரக்கோன் ஆகலின், நன்றும் முயங்கல் ஆன்றிசின், யானே, பொலந்தேர் நன்னன் மருகன் அன்றியும், நீயும் முயங்கற்கு ஒத்தனை மன்னே, வயங்கு மொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை 10 அணங்குசால் அடுக்கம் பொழியும் நும் - மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.