பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

171


நும்மால் மதிக்கப்படும் தலைவர்களுக்கு, 7. கோடல் கண்ணி - காந்தட் பூவாற்செய்த கண்ணி 8. ஆடுமழை இயங்குகின்ற முகில் 9. எற்படு - ஞாயிறுபடுகின்ற.12. புலிப் புகர்ப்போத்து - புலியாகிய புகர் நிறத்தினையுடைய ஏறு; ஒர்க்கும் - செவி தாழ்த்துக் கேட்கும். 158. உள்ளி வந்தனென் யானே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: குமணன். திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம். சிறப்பு: எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு.

(இன்னோர் போல எமக்கு ஈயென்ற இயன்மொழி வாழ்த்து இது என்பர் நச்சினார்க்கினியர் (தொல், புறத். சூ.35)

முரசுகடிப்பு இகுப்பவும். வால்வளை துவைப்பவும், அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக், கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும் பறம்பின் கோமான் பாரியும், பிறங்கு மிசைக் கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்; - 5 காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,

மாரி ஈகை, மறப்போர் மலையனும்; ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல், கூவிளங் கண்ணிக், கொடும்பூண் எழினியும்; ஈர்ந்தண் சிலம்பின் இருள்துங்கும் நளிமுழை, 10

அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப், பெருங்கல் நாடன் பேகனும்; திருந்துமொழி மோசி பாடிய ஆயும், ஆர்வமுற்று - உள்ளி வருநர் உலைவுநனி தீரத், தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக், 15

கொள்ளார் ஓட்டிய நள்ளியும்; என ஆங்கு எழுவர் மாய்ந்த பின்றை, அழிவரப்

பாடி வருநரும் பிறரும் கூடி இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண் உள்ளி வந்தனென், யானே விசும்பு உறக் 2O கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி, ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,

முட்புற முதுகனி பெற்ற கடுவன் துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! 25