பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

புறநானூறு - மூலமும் உரையும்



160.புலி வரவும் அம்புலியும்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: குமணன். திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. சிறப்பு: வறுமையின் ஒரு சோகமான காட்சி பற்றிய சொல்லோவியம். (பரிசிலை விரும்பி, அரசனைப் புகழ்ந்து வேண்டுகின்றார் புலவர்)

'உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த மூளிபுற் கானம் குழைப்பக், கல்லென அதிர்குரல் ஏறொடு துளிசொரிந் தாங்குப் பசிதினத் திரங்கியகசிவுடை யாக்கை - அவிழ்புகுவு அறியா தாகலின், வாடிய 5 நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக், குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில், மதிசேர் நாண்மீன் போல நவின்ற சிறுபால் நன்கலஞ் சுற்ற இரீஇக் "கோடின்றாக, பாடுநர் கடும்பு என, 10 அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி, நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன், மட்டார் மறுகின், முதிரத் தோனே! செல்குவை யாயின், நல்குவன், பெரிது எனப், பல்புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து, 15 உள்ளம் துரப்ப வந்தனென், எள்ளுற்று, இல்லுணாத் துறத்தலின், இல்மறந்து உறையும் புல்லுளைக் குடுமிப் புதல்வன், பன்மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன், பெறாஅன், கூழும் சோறும் கடைஇ, ஊழின் - 20

உள்ளில் வருங்கலம் திறந்து, அழக்கண்டு, மறப்புலி உரைத்தும், மதியங் காட்டியும், நொந்தனள் ஆகி, நுந்தையை உள்ளிப், பொடிந்தநின் செவ்விகாட்டு எனப் பலவும் வினவல் ஆனா ளாகி, நனவின் 25 அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச், செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை நீர்சூழ் நிலவரை உயர, நின் சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே! 30