பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

185


170. உலைக் கல்லன்ன வல்லாளன்!

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். பாடப்பட்டோன்: பிட்டங் கொற்றன். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம்.

("உலைக்கல் அன்ன வல்லாளன்’ என, அவனது வல்லாண்மையைப் பாடினதால், வல்லாண் முல்லைத் துறை ஆயிற்று. 'தெவ்விர் குறுகல் ஒம்புமின் எனத் தானை மறம் கூறியவாறும் கொள்க)

மரையிரித்து உண்ட நெல்லி வேலிப், பரலுடை முன்றில், அங்குடிச் சீறுர், எல்அடிப் படுத்த, கல்லாக் காட்சி வில்லுழுது உண்மார் நாப்பண், ஒல்லென, இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப, 5

வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி பிடிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும் மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்; குறுகல் ஓம்புமின் தெவ்விர்; அவனே சிறுகண் யானை வெண்கோடு பயந்த 10

ஒலிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து, நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல் பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி, நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு இரும்பயன் படுக்குங் கருங்கைக் கொல்லன் 15 விசைத்துஎறி கூடமொடு பொரூஉம் உலைக்கல் அன்ன, வல்லாளன்னே.

பகைவரே! வலிமை பொருந்திய மலைநாட்டுத் தலைவனான கூர்வேல் உடைய பிட்டனை அணுகாதிருப்பீராக! அவன் யானைத் தந்தத்தில் விளைந்த முத்தத்தை விறவியருக்கும், கள்ளைப் பாணச் சுற்றத்திற்கும் கொடுத்து, இரவலர்க்கு மென்மையுடையவ னாவான். ஆனால் பகைவர்க்கோ, கொல்லன் உலைக்களத்திலே விளங்கும் உலைக்கல் போன்ற வல்லாளனாவான் என்பதை மட்டும் மறவாதீர்! -

சொற்பொருள்: 3.எல் அடிப்படுத்த பகற்பொழுது எல்லாம் வேட்டையாடித் திரிந்த கல்லா - கல்வியில்லாத,