பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

319


அல்லாமல், அவர்க்கு இறையிலியாக நிலங்களுந் தந்து காக்கும் சிறந்த ஊரின் தலைவன் அவன். அதுமட்டுமன்று, தன் குடியின் பழம் பெருமையைக் குறித்துப் பேசி, அதனினும் மிகுதியாக வழங்கும் வண்மையும் உடையவன் அவன்! அவன்பால் நீயும் செல்க.

331. இல்லது படைக்க வல்லன்!

பாடியவர்: உறையூர் முதுகூத்தனார். (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்) திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(கொடுத்தலிலே களிகொள்ளும் ஒரு மாண்புடை மறக் குடிப் பெரியோனது பண்பின் ஒவியமாகத் திகழ்வது இச் செய்யுள். 'இல்லது படைக்கவும் வல்லன்' என்பது, அவனது சிறப்பைக் காட்டுவதாம்)

கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல் வில்லேர் வாழ்க்கைச் சீறுர் மதவலி நனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப், புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும். கல்லா இடையன் போலக், குறிப்பின் 5

இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது

தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள், ! நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும் இற்பொலி மகடூஉப் போலச், சிற்சில வரிசையின் அளக்கவும் வல்லன்; உரிதினின் 10

காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் போகுபலி வெண்சோறு போலத் துவவும் வல்லன், அவன் தூவுங் காலே. செங்கற்களை அறுத்துக் கட்டிய உப்புநீர்க் கிணறும், வில்லின் பயனாக அமைந்த வாழ்க்கையும் உடைய சீறுர் அவன் ஊர். மதவலியுடைய அவன், பெரிதும் வறுமையுற்றாலும், பணிமிகுந்து நடுக்கம் விளைக்கும் காலத்திலே கையுடன் நெருப்பு இல்லாது போயினும், தீக் கடைந்து நெருப்பு உண்டாக்கிக் கொள்ளும் இடையரைப்போல, நினைத்தால் இல்லாததைப் படைத்துக் கொள்ளவும் வலிமையுடையவன் ஆவான். உள்ளது மிகச் சிறியதாயினும், மிகப் பலர் வந்தனரே என்றுஞ் சொல்லாது, நீண்ட நெடும் பந்தர்க்கீழ் அனைவரையும் அமர்த்தி, அனைவருக்கும் பகிர்ந்து ஊட்டி மகிழ்விப்பவள், அவன் இல்லிலே விளங்கும் அவன் மனைவி. அவளைப் போலவே, அவனும், இல்லாதபோது சிற்சில அவரவர் தகுதிநோக்கிக் கொடுப்பவன்;