பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

377


பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

("யாம் வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழிய' என வாழ்த்துகின்றனர். வெள்ளியாகிய கோளின் நிலை மாற்றங்களால் நாட்டில் வறுமை ஏற்படும் என்பதனை இச் செய்யுளால் அறிகின்றோம்.)

நெடு நீர நிறை கயத்துப்

படு மாரித் துளிபோல,

நெய்துள்ளியவறை முகக்கவும், சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், ஊன் கொண்ட வெண் மண்டை 5 ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை ஈத்தோன் எந்தை, இசைதனது ஆக, வயலே, நெல்லின் வேலி, நீடிய கரும்பின் 10 பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின; புறவே, புல்லருந்து பல்லா யத்தான், வில்இருத்த வெங்குறும் பின்று; கடலே, கால்தந்த கலன் எண்ணுவோர் கானற் புன்னைச் சினைநிலைக் குந்து, 15

கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி, பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து, அன்னநன் னாட்டுப் பொருநம், யாமே, பொராஅப் பொருநரேம் குணதிசை நின்று குடமுதற் செலினும் 20 குடதிசை நின்று குணமுதற் செலினும் வடதிசை நின்று தென்வயிற் செலினும் தென்திசை நின்று குறுகாது நீடினும் யாண்டும் நிற்க, வெள்ளி யாம் வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே! 25 நீர் நிலையிலே வீழ்கின்ற மழைத் துளிகளைப் போல நெய்யிலே கிடந்து துள்ளியகறிவறுவல்களை உண்ணவும், சூட்டுக் கோல் கிழித்துப் பக்குவப்படுத்திய இறைச்சியைத் தின்னவும், ஊன்