பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

43


பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல். துறை: முதுமொழிக் காஞ்சி. சிறப்பு: சிறந்த அறநெறிகள்.

(இல்லை என்போர்க்கு இனனாகிலியர்' என்பது முதலியவற்றால் அறனும், படைகொள் மாக்கள் - நின் செய்கை' என்பது முதலியவற்றால் பொருளும், 'பாண் முற்றுக நின் நாள் மகிழ் இருக்கை' என்பது முதலியவற்றால் இன்பமும் கூறப்பெற்றன. இவ்வாறு உறுதிப்பொருள் மூன்றையும் வற்புறுத்துதலால் இது முதுமொழிக் காஞ்சி ஆயிற்று. நல்ல தன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர் அறிவிலிகள்; அவர்பாற் சேராதொழிக என்பதும் கூறினார்)

அழல் புரிந்த அடர் தாமரை

ஐது அடர்ந்த நூறு பெய்து, புனைவினைப் பொலிந்த பொலன்நறுந் தெரியல் பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப், பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை ~ . 5.

பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம் ஆங்க் முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக், - கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், - ஒடியா முறையின் மடிவிலை யாகி o . 1 O 'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் . 'இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர் நெல்விளை கழனிப் படுபுள் ஒப்புநர் ஒழிமடல் விறகின் கழிமீன் சுட்டு, வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின் - 15

இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள் பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக், கூவை துற்ற நாற்கால் பந்தர்ச், - சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு 20 உதவி ஆற்றும் நண்பின் பண்புடை ஊழிற்று ஆக, நின் செய்கை விழவின் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும்.இவ் உலகத்துக் கூடிய நகைப் புறனாக, நின் சுற்றம் 25 இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!