பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

99


“கொண்டுதான் வந்தேன்.”

“இப்போது எங்கே? வழியில் தவறிப் போய்க் கொட்டிவீட்டீர்களா?”

“தரையில் கொட்டவில்லை. ஒரு ஏழையின் முந்தானையில் கொட்டி விட்டேன்.”

“என்ன? பிச்சை போட்டு விட்டீர்களா?” “பிச்சை அல்ல! பசித்தவனுக்கு உதவி.”

“நல்ல உதவி! நல்ல பசித்தவன்! இப்போது உங்களுக்கு யார் உதவப் போகிறார்கள்?”

“உஸ்ஸ் இரையாதே! அந்த ஒலைப் பெட்டியை எடு!”

“எதற்காக”

“அடுத்த வீட்டில் நாழி வரகு கடன் வாங்கிக்கொண்டு வருகிறேன்!”

“நன்றாக இருக்கிறது நியாயம்! யாராவது கேட்டால் சிரிக்கப்போகிறார்கள். உங்களுக்கென்று அளித்த கூலியை எவனிடமோ உதறிவிட்டு இப்போது நீங்கள் கடனுக்குப் பிச்சை எடுக்கப் போக வேண்டுமாக்கும்?”

“கொடு என்றால் கொடு உனக்கு ஏன் இந்தக் கவலை நான் வாங்கி வருகிறேன்.”

அவன் ஒலைப்பெட்டியை வாங்கிக்கொண்டு கடன் கொடுப்பாரைத்தேடி நடந்தான்.அவன் மனைவி எண்ணுவதைப் போலவே நாமும் அவனை ஒர் அசடனாகத்தான் எண்ணுவோம்!

அவனை மட்டும் என்ன? தர்ம நியாயத்துக்கு அஞ்சிக் கருணை கொள்ளும் எல்லோருக்குமே இந்த உலகம் அசட்டுப் பட்டம்தான் கட்டுகிறது! ஒரு பெரிய அரசாட்சியை அப்படியே தூக்கிக் கொடுத்தால் ஆளுகின்ற அவ்வளவு பெரிய வல்லாளன்தான் அவன்! அந்த வல்லாளன் இப்போது