பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

புறநானூற்றுச் சிறு கதைகள்


கால்குறுணி வரகரிசிக்காக வீடு வீடாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறான்! தர்மத்தின் பயனைப் பற்றி அவனுக்குத் தெரியாது தர்மம்தான் தெரியும்!

உண்மைதான்! நாமாவது ஒப்புக்கொள்ளலாமே, அவன் ஓர் உலகு புரக்கும் வல்லாளன்தான் என்று!

எருது காலுறாஅது இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டுகடை தப்பலின்
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்ஊர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே! (புறநானூறு- 327)

கொன்ற = அடித்த, சில்விளை - சிலவாக விளைந்த, தொடுத்த கடவர் = வினைஞர்கள், ஒற்கம் = சுற்றம், சொலிய = போக்க, சிறு புல்லாளர்=கேவலமானவர்களிடம், கடன் இரக்கம் = கடன் கேட்கும், நெடுந்தகை = ஆண்மகன்.


23. நீரும் நெருப்பும் ஒன்றே!

அரசர்க்கெல்லாம் அரசனாகப் பேரரசு செலுத்தி வாழ்ந்த பூதப்பாண்டியனுடைய பெருவாழ்வு அன்றோடு முடிந்து விட்டது. கதிரவன் மறைந்தபின் சூழ்கின்ற இருட் படலத்தைப் போலப் பாண்டி நாடெங்கும் துன்பமென்கிற அந்தகாரம் சூழ்ந்திருந்தது.மக்களைத் தாயாக இருந்து பேணிய பெருவள்ளல் ஒருவன் மாண்டு போய்விட்டான் என்றால் அது சாதாரணமாக மறந்துவிடக்கூடிய துன்பமா?

ஆதவன் கதிரொளி மங்கிக் கொண்டிருக்கும் அந்தி நேரம் மதுரை மாநகரத்துக் மயானத்தில் எள் போட்டால் கீழே விழ