பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

103


குரல்களை எழுப்பினர். மெய்க்காவலர்களும் புலவர்களும் அந்த ஒரே ஒரு விநாடிஅஜாக்கிரதையாக இருந்திருந்தால்பெருங்கோப் பெண்டு கணவன் உடலை எரித்துக் கொண்டிருந்த தீயோடு தீயாகத் தானும் சங்கமமாகியிருப்பாள். நல்ல வேளை அவள் குபிரென்று பாய்ந்தபோது காவலர்களும் புலவர்களும் விரைவாகக் குறுக்கே பாய்ந்து அப்படிநேர்ந்துவிடாமல் அவளை மறித்துக் கொண்டனர்.

பெருங்கோப் பெண்டு அவர்களையும் மீறித் திமிறிக் கொண்டு சிதையில் பாய்வதற்கு யத்தனித்தாள். புலவர்களும் காவலர்களும் சூழ நின்று கொண்டுவிட்டதனால் அது முடியவில்லை.

“ஏன் என்னைத் தடுக்கின்றீர்கள்? நான் என் கணவரோடு போகப் போகிறேன். என்னைவிட்டு விடுங்கள்.” பெருங்கோப் பெண்டு துயர வெறி நிறைந்த குரலில் ஒலமிடுவது போலக் கூறினாள்.

“தேவி வீண் ஆத்திரம் கொள்ளாதீர்கள். தங்கள் கணவரை இழந்து துயரமுற்றிருக்கும் இந்த நிலையில் தாங்களும் இப்படி வலுவில் உயிரை மாய்த்துக்கொள்ள முயல்வது எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாதது. பெருங்கோப் பெண்டுடன் ஏற்கனவே அறிமுகமாயிருந்த புலவர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டனர்.

அவன் அவர்களைச் சுட்டெரித்து விடுவதுபோல ஏறிட்டுப் பார்த்தான்.

“ஆம் தாயே! எங்கள் வேண்டுகோளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.இந்த அதிபயங்கரமானகாரியத்தை எங்கள் கண்காண நீங்கள் செய்யவிடமாட்டோம்” புலவர்கள், மெய்க் காவலர்கள் எல்லோரும் சேர்ந்து ஏகோபித்துக்கூக்குரலிட்டனர்.

பெருங்கோப்பெண்டின் முகத்தில்துயரம் நீங்கி ஆத்திரமும் கடுகடுப்பும் நிழலிட்டன. கண்களின் சிவப்பு முன்னை விட அதிகமாயிற்று.