பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

புறநானூற்றுச் சிறு கதைகள்


புலவர் பெருந்தலைச் சாத்தனார் இவ்வாறு கூறவும்,

“பெருந்தகையீர்! அந்தச் சோகைக் கதையைத் தாங்களே சிரமத்தைப் பாராமல் தெரிவித்துவிட்டால் உண்மையை நாங்கள் புரிந்து கொள்வோம்” என்று மேலும் தூண்டினான் கண்டீரக்கோ.

“கதையைச் சொல்கிறேன் கேள், கண்டீரக்கோ! உன் நண்பனையும் கேட்கச்சொல்.நான் ஏன் உன்னுடைய நண்பனின் வணக்கத்தையும் வரவேற்பையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கதை மூலம் உன் நண்பனும் தெரிந்து கொள்ளட்டும்.”

“சரி இருவருமே கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறோம். நீங்கள் கதையைக் கூறுங்கள்”

“இந்த இளவிச்சிக்கோவின் முன்னோர்களில் நன்னன் என்று ஒர் அரசன் இருந்தான். சிறந்த கொடைப் பண்பும் வீரமும் உடையவனாயினும் முன்கோபமுடையவன். எதையும் சிந்தித்து ஆராய்ந்து செய்யாமல் திடீரென்று செய்துவிடுவான்.தான் தவறு செய்யும்போது தானாக உணர்ந்தோ, பிறர் கூறுவதைக் கேட்டோ தன்னைத் திருத்திக் கொள்ளுகின்ற குணம் அவனிடம் இல்லை. இதனால்தான் வாழ்க்கையில் எந்த அரசருமே செய்யத் துணியாத ‘பெரும் பாதகம்’ ஒன்றைச் செய்து எல்லோராலும் தூற்றப் பட்டான் அந்த நன்னன்.

அவனுடைய தலை நகரத்தின் எல்லையிலே ஆற்றோரத்தில் நகரின் காவல் மரம் அமைந்திருந்தது. அது ஒரு நல்ல மாமரம். அந்த மாமரத்தில் காய்க்கும் காய்களையோ, கனிகளையோ எவரும் தீண்டவே கூடாது. காவல் மரம் என்றால் அது அரசனைப் போலவே எண்ணி மரியாதை செலுத்துவதற்குரிய ஒரு புனிதமான பொருள் அல்லவா? அதுவும் நன்னன் தன் காவல் மரத்துக்கு மற்ற அரசர்கள் இயற்கையாகச் செய்யும் கட்டுப்பாடுகளைவிட அதிகமாகவே கட்டுப்பாடுகள் செய்திருந்தான்.

ஒரு நல்ல கோடை காலத்தில் அந்த மாமரம் கொத்துக் கொத்தாகக் காய்ந்திருந்தது. வளமான காய்கள் மரம் எங்கனும்