பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

159


வாழ்த்திவிட்டு வர வேண்டும் என்ற எண்ணம் வளவனுக்கு உண்டாயிற்று.

உடனே அருகிலிருந்த ஒரு பாணனிடம் யாழை இரவல் வாங்கிக் கொண்டான். ஒன்றும் தெரியாதவனைப்போல எதிரே வந்தவர்களிடம் எல்லாம்"ஐயா! இங்குப்பசி நோய்க்கு வைத்தியம் செய்யும் பண்ணன் என்பவர் வசிக்கிறாராமே? அவருடைய விடு பக்கத்தில் இருக்கிறதா? தொலைவில் இருக்கின்றதா?” என்றுவழி கேட்டுக்கொண்டே போய் அந்த மாளிகைக்குள் நுழைந்தான். யாழ் வாசிக்கும் பாணன் ஒருவன் யாசிக்கச் செல்வதுபோல் நடித்துக் கொண்டு குனிந்த தலையோடு போவது அந்த மன்னாதி மன்னனுக்குத் துன்பமாகத்தான் இருந்தது. ஆனால் பண்ணனைக் கண்டு வாழ்த்தும்போது அவனைவிடத் தாழ்ந்த நிலையிலிருந்தே வாழ்த்திவிட்டுத் தான் இன்னார் என்று தெரியாமல் வந்துவிட வேண்டுமென்பதுதான் வளவனுடைய திட்டம்.

கையில் இரவல் வாங்கிய யாழ், மெய்யில் யாசகனைப் போன்ற குழைவு. இயற்கையான கம்பீரத்தை மறைத்துக் கொண்டு வலிய உண்டாக்கிக் கொண்ட பணிவு. வளவன் வயிறு வளர்க்கும் பாணனாகப் பண்ணன் முன்னால் போய் நின்றான். “வாருங்கள்! வாருங்கள்! பாணரே! உங்களுக்கு என்ன வேண்டும்? எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். உடனே மறுக்காமல் தருகிறேன்.” பண்ணன் மலர்ந்த முகத்துடன் வரவேற்றான்.

பாணனாக நின்று கொண்டிருந்த கிள்ளிவளவன் தெய்வ பிம்பத்தைப் பயபக்தியோடு தரிசனம் செய்வதைப் போல இமையாமல் பண்ணனையே பார்த்தான். கை கூப்பி வணங்கினான். கண்களில் கண்ணிர் மல்கியது.

“பண்ணா! நீ கொடுத்துக் கொடுத்து உயர்ந்தவன்.உன்னிடம் நான் வாங்க வரவில்லை. கொடுக்க வந்திருக்கிறேன்.”

“எதை கொடுக்கப் போகிறீர்கள்?"