பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

புறநானூற்றுச் சிறு கதைகள்


கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்புகொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே! (புற நானூறு-110)

கடந்து அடுதானை = நேர் நின்று போரிட வல்ல படை, உடன்றனிர் ஆயினும் = போர் செய்தீர்கள் ஆனாலும், பறம்பு = பாரியின் மலை, ஊர்த்தே = ஊரையுடையது.