பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

61


ஒளவையாரும் அதியமானும்கூடச் சிறிது நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு நீர் துறையின் புறமாகப் பார்வையை இலயிக்க விட்டனர்.

பாகர்கள் இரண்டு மூன்றுபேர் யானையின் உடம்பைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தனர். ஒரு பாகன் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்களில் சிலரைக் கூப்பிட்டான். அவனால் கூப்பிடப்பட்ட சிறுவர்கள் அவனுக்குப் பக்கத்தில் போய் நின்று “என்ன?” என்று கேட்டார்கள்.

“தம்பிகளா! உங்களுக்கு ஒரு வேலை தருகிறேன். செய்வீர்களோ?”

“என்ன வேலை? சொல்லுங்கள். முடிந்தால் செய்கிறோம்” சிறுவர்கள் மறுமொழி கூறினர்."இதோ, இந்த யானையின் தந்தம் இருக்கிறது பாருங்கள்! நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து இதைத் தேய்த்துக் கழுவிவிட வேண்டும்.”

“ஐயய்யோ யானை கொம்பை அசைத்துக் குத்திவிடுமே” ஏககாலத்தில் எல்லாச் சிறுவர்களும் மிரண்டு அலறினர்.

“அதெல்லாம் உங்களை ஒன்றும் செய்யாது! நான் பார்த்5ಕ கொள்கிறேன். தைரியமாக அருகில் வந்து இரண்டு கொம்பு களையும் கழுவுங்கள்” பாகன் உறுதிமொழி கூறினான்.

சிறுவர்கள் பாகனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி யானையை நெருங்கி அதன் நீண்ட பருமனான தந்தங்கள் இரண்டையும் தேய்த்துக் கழுவத் தொடங்கினார்கள். யானை அசையாது தண்ணிரில் முன்போலவே கிடந்தது. சிறுவர்களுக்கு நம்பிக்கையும் துணிவும் அதிகமாகிவிட்டது. “யானை நிச்சய மாகத் தங்களை ஒன்றும் செய்யாது” என்ற தைரியம் இப்போது ஏற்பட்டுவிட்டது.

ஒரு சிறுவன் மத்தகத்தின்மேல் ஏறிப் பிடரியில் உட்கார்ந்து கொண்டு அடிக் கொம்பைக் குனிந்து தேய்த்தான். இன்னொருவன் கொம்பின் அடி நுனியைக் கழுவுவதற்காக யானையின் கடைவாய்க்குள் தன் சிறுகையை நுழைத்தான்.