பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

புறநானூற்றுச் சிறு கதைகள்


வன்மை வாய்ந்த வீரர்கள் பலர் அந்த ஆயுத சாலையைச் சுற்றிக் காவல் புரிந்து வந்தார்கள். தொண்டைமானுடைய ஆயுத பலத்தின் பெருமையை விளக்குவதற்கு அந்த ஆயுத சாலை ஒன்றே போதும் கண்கண்ட சான்றாகக் காட்டி விடலாம்.

ஒளவையார் இதைப் பார்க்க வேண்டும்; பார்த்துப் பிரம்மிக்க வேண்டும் என்பதற்காகவே தொண்டைமான் ஒளவையாரை அழைத்து வந்து ஒவ்வொரு பகுதியாகப் பெருமிதத்தோடு காட்டிக் கொண்டிருந்தான்.

ஒளவையார் தன் நாட்டிலிருந்து திரும்பிச்சென்று அதியமானைக் கண்டு, “அதியா! தொண்டைமானுடைய படைச் சாலையைப் பார்த்தேன். அதில் நிரம்பியுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. உன்னைவிட அவன் வலிமை பெரிதாக இருக்கும்போலத் தோன்றுகிறது” என்று அவனிடம் சொல்லும் படியாகச் செய்துவிட வேண்டும் என்பதும் தொண்டைமானின் ஆசை. அப்படி ஒளவையார் போய்க் கூறினால் அதியமான் உடனே பயந்துபோய்ப் படையெடுப்பையே நிறுத்திவிடுவான்’ என்றெண்ணிக் கொண்டான் அவன்.

“ஒளவையாரே! இந்தப் பெரிய மாளிகைதான் என் படைச்சாலை. பாருங்கள் இந்த மாளிகையே காணாதபடி ஆயுதங்களை நிரப்பி வைத்திருக்கிறேன்.”

“அப்படியா?”

தொண்டைமர்ன் தன் பெருமையைப் பற்றியே அளந்து. கொண்டு வந்தான். ஒளவையார் சுருக்கமாக ஓரிரு வார்த்தை களாலேயே அவன் பேச்சுக்குப் பதில் கூறிக்கொண்டு வந்தார்.

“இன்னும் ஆயுதங்கள் கொல்லர்களிடமிருந்து வந்து சேரவில்லை. இதுவரை செய்து முடித்திருக்கும் ஆயுதங் களாலேயே இந்த மாளிகை நிரம்பிவிடும் போலிருக்கிறது.”

“ஓஹோ...”