பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

புறநானூற்றுச் சிறு கதைகள்


“ஐயா! ஐயா.”

போகிழவி உனக்கு வேறு வேலை இல்லை.”

“ஐயா! நீங்களாவது சொல்லுங்கள் ஐயா! ‘என்ன ஆயிற்றோ?’ என்று பெற்று வயிறு பதறித் துடிக்கிறது...”

“எனக்கு உன் மகனையே தெரியாதேபாட்டி”

“ஐயா! அவன் சிவப்பா, உயரமா.நல்ல அழகு”

“அப்படி ஆயிரம் பேர்! அதிலே யாரென்று நினைவு வைத்துக் கொள்ள முடியும்?’

“.......”

அடுத்து உண்மையிலேயே அவள் மகனைநன்றாகத் தெரிந்த ஒரு வீரன் வந்தான். தன் மகனோடு அடிக்கடி அவன் சுற்றித் திரிந்து பழகுவதைப் பலமுறை அவளே கண்டிருக்கிறாள். மகனைப் பற்றிய செய்தியை அவனாவது கூறுவான் என்ற ஆவலோடு கிழவி அவனை நெருங்கினாள்.ஆனால் அவனோ அவளைக் கண்டும் காணாதவனைப்போல முகத்தைத் திருப்பிக் கொண்டு போக முயன்றான்.

“இந்தாப்பா! உன்னைத்தானே?” கிழவி அவனைவிட வில்லை.

“என்ன பாட்டி?”

“என் மகனைப் பற்றி....?”

அவன் கிழவியைப் பரிதாபகரமாகப் பார்த்தான். பரக்கப் பரக்க விழித்தான்.பின்பு பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு விறுவிறுவென்று நடந்துவிட்டான்.

“ஏய் ஏய்! என்னப்பா? பதிலே சொல்லாமல் போகிறாய்?” கிழவி கூப்பாடு போட்டாள். ஆனால் அவன் திரும்பிப்பார்க்கவே இல்லை. வேகமாக நடந்து கிழவியின் கண்களிலிருந்து மறைந்து விட்டான்.