பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Helgië csásd * ghaoui u-ಖಹಿ 113 வட்ட்க் காலாற் சிறந்த தேரினையும், போர்வெல்லும் குதிரையினையும், தலைமைப்பாட்டை யுடைய மதயானை - யையும், வலிகொண்ட தோளினையும் உடைய பகைவரது படைகள் எல்லாம், ஒளிநிறைந்த சினத்தீயினைச் சொரியும் * வேலினையும் தலைமையினையும் உடைய கடல்போன்ற நம் மன்னனது தானையானது, பகைவர் அச்சத்தால் நடுங்குமாறு நிலைபெயர்ந்து நடக்குமானால், என்ன பாடுதான் படுமோ? தும்பையாரின் செற்றத்தைக் கண்டோர், அதனாற் பகைப்படைக்கு வந்துறும் அழிபாட்டைக் குறித்து இரங்கியது இது. . . " - - 5. யானை மறம் எழுமரவக் கடற்றானையான் - மழகளிற்றின் மறங்கிளர்ந்தன்று. - ஆரவாரித்து எழுகின்ற, கடல்போற் பரந்த சேனையினை . உடையானானதும்பை மன்னனது, இளங்களிற்றினது மறத்தைச் சொல்லுவது, யானைமறம் ஆகும். - - மழகளிற்றின் மறத்தினைச்சொல்வது, அதனாற் பகைப்படை உறப்போகும் அழிவிற்கு இரங்குவதுமாகித், தும்பைத் திணை ஆயிற்று. . . . . - - அடக்கருந்தானை அலங்குதார் மன்னர் . விடக்கும் உயிரும் மிசையக்-கடற்படையுள் பேயும் எருவையும் கூற்றுந்தன் பின்படரக் காயும் கழலான் களிறு. 132 வீரக் கழலினை உடையானான தும்பை வேந்தனின் கொல்களிறானது,பகையரசரது கடல்போன்ற படையுள் புகுந்து, அடக்குதற்கரிய அவரது தானையதும்,அசைகின்றமாலையுடைய அம் மன்னர்களது. தசையினையும் உயிரினையும் - உண்ணும்பொருட்டாகக் கழுகுகளும் கூற்றுவனும் தன்னைப் பின்தொடர்ந்து வரச் சென்று வெகுளுமே! விடக்கு-தசை, களிற்றது ஆற்றலால் பகைப்படைக்கு நேரப்போகிற அழிவினைக் குறித்து இரங்கிய, தும்பை மறவன் ஒருவனது கூற்று இது. - - - - 6. குதிரை மறம் எறிபடையான் இகலமருள் செறிபடையான் திறங்கிளந்தன்று.