பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பாடாண் பாட்டே வாயில் நிலையே கடவுள் வாழ்த்தொடு பூவை நிலையே பரிசில் துறையே இயன்மொழி வாழ்த்தே கண்படை நிலையே துயிலெடைநிலையே மங்கல நிலையொடு விளக்கு நிலையே கபிலை கண்ணிய புண்ணிய நிலையே வேள்வி நிலையொடு வெள்ளி நிலையே நாடு வாழ்த்தொடு கிணையதுநிலையே களவழி வாழ்த்தே வீற்றினி திருந்த பெருமங்கலமே குடுமி களைந்த புகழ்சாற்று நிலையே மணமங்கலமே பொலிமங்கலமே நாண்மங்கலமே பரிசில் நிலையே பரிசில் விடையே ஆள்வினைவேள்வி. பாணாற்றுப் படையே கூத்தராற்றுப் படையே வாயுறை வாழ்த்தே செவியறிவுறுஉக் - குடைமங்கலமொடுவாண்மங்கலமே மண்ணுமங்கலமே ஒம்படை ஏனைப் . . புறநிலை வாழ்த்தும் உளப்படத் தொகைஇ அமரர்கண் முடியும் அறுவகையாகிய - கொடிநிலை கந்தழி வள்ளி குணஞ்சால் - புலவரையவர்.வயிற் புகழ்ந்தாற்றுப் படுத்தல் புகழ்ந்தனர் பரவல் பழிச்சினர்ப்பணிதல் நிகழ்ந்த காமப் பகுதியுள் தோன்றிய கைக்கிளை வகையுள் பெருந்திணை வகையும் நற்றுனி நவின்ற பாடாண் பாட்டும் - கடவுட் பக்கத்தும் ஏனோர் பக்கத்தும் மடவரன் மகளிர் மகிழ்ந்த பக்கமும் மாதர் மகிழ்ந்த குழவியும் ஊரின் கண்ணே தோன்றிய காமப் பகுதியோடு ஆங்க வாறெண் பகுதிப் பொருளும் பாங்குற உரைப்பது பாடாண் பாட்டே - (9) பாடாண் பாட்டு என்கின்ற பாடாண் திணையாவது நாற்பத்தெட்டு ஆகும். அவை திணை ஒன்றும் துறைகள் நாற்பத்தேழும் ஆம் துறைகளாவன. - வாயில் நிலை; கடவுள் வாழ்த்5; பூவை நிலை பரிசில்துறை: இயன்மொழி வாழ்த்து கண்படை நிலை, துயிலெடை நிலை;