பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்_k சிறப்புப் பாயிரம் 5 இது சிறப்புப் பாயிரம், அதனால், இதனைச் செய்தவர் இவருடைய ஆசிரியர், ஒருசாலை மாணாக்கர், அல்லது இவர்தம் மாணாக்கர் ஆகியோருள் ஒருவராக இருக்கலாம். புறப்பொருள் இலக்கணம், வெட்சி முதலாகப் பன்னிரு படலங்களாகக் கூறப்படும்.இவற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு படலமாக அகத்தியரின் மாணாக்கர்கள் பன்னிருவரும் செய்தனர். அதனாலேயே, அது பன்னிரு படலம் எனப் பெயர் பெற்றது எனவும் கொள்வர். அதனையொட்டிய வழி நூல் இது. பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த. பண்புற மொழிந்தனன் என்பதனால் இப்படிக் கொள்ளப்படும். "ஓங்கிய சிறப்பின் உலகம் என்றது, பண்பால் உயர்வுற்றிருந்த சிறப்பினையுடைய தமிழகப் பகுதியினை, அகலிடம் என்பது, செந்தமிழ் கொடுந்தமிழ் வழங்கும் நாடுகளை எல்லாம் உள்ளடக்கி உரைத்ததாம். XXXXXX