பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 புறப்பொருள் ിഖങ്ങാ மூலமும் உரையும் அணிகளாற் சிறந்த முலைகளை உடையவரான மகளிரது மனம் உருகுமாறு, வேன்முருகனுக்கு வெறியாடிப் போற்றுவது, வள்ளி' என்பது வள்ளிக் கூத்து. வள்ளி என்பது தண் கதிர் மண்டிலம் எனவும்,கொடி எனவும் கூறுவாரும் உளர். வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே ஈண்டியம் விம்ம இனவளையார்-பூண்தயங்கச் சூலமோ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு வேலனோ டாடும் வெறி. - 229 ஆபரணம் இலங்கச் குலத்துடனே நின்று கூத்தாடும் சோதியான் மிகுந்த சடையினை உடையானின் திருமகனுக்கு, தம்மில் தாம் ஒத்த வளையினை உடையாரான மகளிர்கள், திரண்ட இசைக்கருவிகள் முழங்காநிற்ப, வேலனொடு கூடி ஆடாநின்ற வள்ளிக்கூத்தினை, நீயும் வேண்டுதியால் நினது இவ் விருப்பம் மிகவும் சீரிதாம்! - - - - - வெறி வேண்டுதியால் நீயும், அவ் விழைவோ விழுமிதே' என்றனர். 41. புலவராற்றுப் படை இருங்கண்வானத் திமையோருழைப் பெரும்புலவனையாற்றுப்படுத்தன்று; பெரிய இடத்தினையுடைய வானத்துத் தேவர்களிடையே பெரும் புலமையாளனை வழிப்படுத்தது, புலவராற்றுப்படை ஆகும். - - வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின் நெறிகொள் படிவத்தோய் நீயும்-பொறிகட் - கிருளியும் ஞாலத் திடரெல்லம் நீங்க அருளியும் ஆழி யவன். - 230 - முறைமைகொண்ட வேடத்தினை உடையோய்! நீயும் நறுநாற்றத்தைக் கொண்டிருக்கும் ஒலிக்கும் அருவிகளையுடைய வேங்கடத்திடத்தே சென்றனையானால், ஐம்பொறிகட்கும் மயக்கத்தைத் தருகின்ற இந்த உலகத்தினது துன்பம் எல்லாம் நின்னைவிட்டு நீங்கும்படியாக, சக்கரத்திலே உடையானான திருமால், நினக்கு அருளினை வழங்குவான். - 'உலவா ஊக்கமோடு உன்னியது முடிக்கும், புலவராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே' என்பது பன்னிரு பாட்டியல்-(சூ.320).ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்,பெற்ற .* . . .