பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 218 புறப்பொருள் ഖേങ്ങാഗ്ര உரையும் - நிலையுடையது மெய்ப்பொருள் எனவும், பிற நிலையாமை உடையன எனவும் உணர்த்துதல் இது. . இளமை நிலைதளர மூப்போ டிறைஞ்சி உளமையுணரா தொடுங்கி-வளமை வியப்போவ லில்லாவியலிடத்து வெஃகாது உயப்போகல் எண்ணின் உறும். 273 இளமைப் பருவமானது தன் நிலையினின்றும் தளர்ந்து போக, முதுமையுடனே தாழ்ந்து, உண்மையினை உணராதே அடங்கிச், செல்வத்தினது ஆச்சரியம் ஒழிதலில்லாத அகன்ற இப்பூமியிடத்தே, எதனையும் விரும்பாமல் பிழைத்துப்போதலை எண்ணினால்,அஃது உயிருக்கு உறுதியுடைத்தாம். - இளமை நிலையாமையினையும், செல்வ நிலையாமை யினையும் உணர்ந்து, விருப்பம் என்பதும் அற்றவராக, உண்மைப் பொருளினைத் தெளிந்து, பிழைத்துப் போதலை நினைந்தால் பயன் உண்டாகும் என்பது கருத்து. - . . . . - 35. காடு வாழ்த்து பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல் கல்லென ஒலிக்கும் காடுவாழ்த்தன்று. - - உலகிடத்து எஞ்சியோர் பலருக்கும். நிலைமையினை அறிவுறுத்துவதுபோல முழங்கும், பெரிதானமுழக்கத்தையுடைய சாப்பறையானது கல்லென்று முழங்கா நின்ற சுடுகாட்டை வாழ்த்தியது காடு வாழ்த்தியது ஆகும். - - - . மலர் தலை உலகத்து மரபு நன்கறியப், பலர் செலச்செல்லாக் காடு வாழ்த்து என்பர் தொல்காப்பியர் (புறத். சூ. 24). பிறந்தோரெல்லாம் இறப்பவும்,தான்நிலைத்திருக்கும் காட்டினை வாழ்த்துவது இது முன்புறந்தான்காணும் இவ்வுலகை இவ்வுலகில் - தன்புறங்கண்டறிவார் தாமில்லை-அன்பின் அழுதார்கணிவிடுத்த வாறாடிக் கூகை கழுதார்ந்திரவழங்குங் காடு. 274 - அன்பினாலே அழுதவருடைய கண்கள் சொரிந்த நீராகிய ஆற்றிலே முழுகி, கூகையும் கோட்டானும் நிறைந்து இராப் பொழுதிலே உலவுவதற்கு இடமான சுடுகாடு, இவ்வுலகத்தினைத் தான் முன்னே முதுகுகாணும்; அன்றி, அதனை முதுகுகண்டு அறிந்தவர்தாம் எவரும் இல்லை. ‘. . . உலகத்தவர் பலரையும் தான் கொண்ட சுடுகாடு நிலையானது அதனால், உடலது அழிவும் உறுதியானது: ஆகவே, உயிர்க்கு உறுதி தேடல் வேண்டுமென்பது கருத்து