பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் சூழ்ந்த மலையையுடைய முருகனுக்கு வெறியாடியது, வெறியாட்டு ஆகும். வெய்ய நெடிதுயிரா வெற்பன் அளிநினையா ஐய நனிநீங்க ஆடினாள் - மையல் அயன்மனைப் பெண்டிரோ டன்னைசொல் அஞ்சி வியன்மனையுள் ஆடும் வெறி. 334 தலைவியானவள், வெய்யதாக நெடுமூச் செறிந்தவளாகத், தலைவன் தனக்குத் தண்ணளி செய்தலை நினைந்து, மயக்கத்தை யுடைய அயன்மனைப் பெண்டிருடனே அன்னை சொல்லும் சொல்லுக்கும் அஞ்சியவளாகத் தனது அகன்ற மனையினுள்ளாக, வேன்முருகற்கு ஆடும் வெறியினை, அன்னையது ஐயம் மிகுதியும் நீங்கும்படியாக ஆடினாள். - 30. பாண் வரவுரைத்தல் மாணிழைக்கும் வயலூரன் பாண்வரவு பாங்கிமொழிந்தன்று. மாண்ட அணிகளை உடையாளான தலைவிக்கு, வயலூரனது பாண்மகனின் வரவினைப், பாங்கி சென்று சொல்லியது,பாண்வர வுரைத்தல் ஆகும். அஞ்சொற் பெரும்பணைத்தோள் ஆயிழையாய் தாநொடியும் வஞ்சந் தெரியா மருண்மாலை-எஞ்சேரிப் பண்ணியல் யாழொடு பாணனார் வந்தாரால் எண்ணிய தென்கொலோ ஈங்கு. 335 அழகிய சொல்லையும், பெருத்த மூங்கிலனைய தோளினையும்,தெரிந்த அணிகளையும் உடைய தலைவியே! தாம் சொல்லுகின்ற பொய்ம்மையினை ஆராயமாட்டாத மயக்கத்தைச் செய்யும் இம் மாலைப் பொழுதின் கண், எம் சேரியிடத்தே, பண்ணது இயல்புக்கு ஒத்த யாழிசையொடுங் கூடியவராகப் பாணனாரும் வந்தார்; இவ்விடத்தே அவர் எண்ணிவந்த செயல்தான் என்னவோ? அதனை அறிகிலேன், - நொடியும் கூறும் பாணனார் இகழ்ச்சிக் குறிப்பு. - 31. பரத்தை கூறல் தேங்கமழ் சிலம்பன் தாரெமக் கெளிதெனப் பாங்கவர் கேட்பப் பரத்தை மொழிந்தன்று. மணங்கமழும் மலையையுடைய தலைவனது - மாலை எமக்குப் பெறுதற்கு எளிது’ என்று சொல்லித்,தன்பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது, பரத்தை கூறல் ஆகும்.