பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

యulēతL_QLCతీఱుLు_23 தலைவி வருந்தும் பெண்பாற் கிளவியும் தலைவனது அளியினை வேண்டிய தலைவி, தாய் அறியாதபடிவேன்முருகற்கு வெறியாடி வேண்டுதலாகிய வெறியாட்டும் தலைவனது பாணன் வந்ததனைத் தோழி தலைவிக்கு உரைத்தலாகிய பாண்வரவு உரைத்தலும் பரத்தை, தன் பாங்காயினர் கேட்பத் தலைவனைத் தான் பெறுதல் எளிதெனக் கூறும், பரத்தை கூறலும் தோழி தலைவனுக்குப் பரத்தையரது இன்பம்.அமுதம் போன்றது எனப் பாணிச்சிக்குக் கூறுதலாகிய, விறலி கேட்பத் தோழி கூறலும், தலைவனது முதுமை பரத்தையர்க்கு நாட்பட்ட கள் போன்றது. என விறலி தோழிக்கு உரைத்தலாகிய, விறலி தோழிக்கு விளம்பலும் - சேரிப் பரத்தையின் தோழி இற்பரத்தையின் தோழிக்கு உரைத்தலாகிய, பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தலும்; தலைவன் பரத்தையர் சேரியில் துயின்றதனை விறலி கூறலும், தலைவியொடு தலைவன் கடைபோக வாழாது இடையிற் கைவிட்டதாகிய குற்றிசையும் தலைவியை அறவே கைவிட்டுப் பிறமகளை விரும்புதற்குத் தலைவனிடத்தே எழுந்த வேட்கை கெடும்படி கூறியதாகிய குறுங்கலியும் ஆம். - ಛಿಛಿಛಿ.