பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Helgië Gastsch * stéját படலம் 77 காஞ்சியானின் படைமறவர் போர்ப்பூக் கொள்ளலாகிய பூக்கோள் நிலையும்; களத்தில் பட்டானது தலையது மாண்பினைப் பாராட்டும் தலைக்காஞ்சியும்; தலைகொடுத் தானுக்கு அரசன் செய்யும் சிறப்பாகிய தலைமாராயமும், களத்தே வீழ்ந்து பட்டுக்கிடந்த கணவனின் தலையொடு மனைவியும் உயிர் விடுதலாகிய தலையொடு முடிதலும். - பகைவரது மலைப்பு நீங்குமாறு காஞ்சி வேந்தன் போரைச் செலுத்துவதும், நிலத்து வீழ்ந்த மறவன் தன் புண்ணைத் தானே கிழித்து உயிர் விடுவதும், ஆகிய மறக்காஞ்சியும். களத்திலே விழுப்புண்பட்டுக் கிடந்த வீரனைப் பேய் ஒம்புதலாகிய பேய்நிலையும், பேய் வீரனை அச்சுறுத்த முயலுதலாகிய பேய்க் காஞ்சியும்; புண்ணுற்றுக் கிடந்த வீரனது புண்ணைத் தொட்டு அவனுயிரைப் பேய் போக்குதலாகிய தொட்ட காஞ்சியும், பேய்ப்பகை அமைந்திருக்கப் பேய் தொடாதேயே அகலும் தொடாக் காஞ்சியும்- . - வீழ்ந்த தலைவனது முன்னைச் சிறப்பைக் கூறுதலால் அமையும் மன்னைக் காஞ்சியும்; மறவர்க்குக் கள் வார்க்கும் கட்காஞ்சியும், காதற் கணவனொடு மனைவி எரிமூழ்கியும், வேலினாற் குத்திக்கொண்டும் உயிர்விடுதலாகிய ஆஞ்சிக் காஞ்சியும். - மகள் தர மறுத்தலாகிய மகட்பாற் காஞ்சியும் பகைவரை முன்னிருந்த போர்முனையினின்றும் ஒட்டுதலாகிய முனைகடி முன்னிருப்பும் ஆகியவை ஆம் ಛಿಛಿಛಿ.