பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鳄8 புற்று டிருந்தாலும், யறியாத எஃகுச் சுருள்கள் அதனுள் இருந்து, நீ வகை தெரியாமல் சுழற்றுகையில் குதித்து உன் முகத்தில் அடித்துவிடும் கடிதத்தை மடித்து அவள் கண்ணும் கையும் உடனே படும்.இடத்தில் வைத்தேன். நகைகளையும் பணப் பையை யும் எடுத்துக்கொண்டு, பாக்கி சாமான்களை ஜன்னல்வழி வீசி எறிந்தேன். கை வளையல்கள் கழற்றச் சுலபமாய் வந்தன. வண்டியின் வேகம் குறைய ஆர ம்பித்தது. எட்டிப் பார்த்தேன். ஏதோ ஒரு சின்ன ஷ்டேஷனின் விளக்கு இரவில் மினுக்கியது. ஒரு முறை அவளிடம் சென்று முகத் தைக் குனிந்து பார்த்தேன். "ஆழ்ந்த தாக்கத்திலிருந்தாள். வாயோரத்தில் கொஞ்சம் எச்சில்கூட வழிந்திருந்தது. மேல் உதட்டோரத் தில் ஒரு மறு இருந்தது. மேல்பூச்சுக்களால் தெரியாமல் அவள் மறைத்திருந்த சாமர்த்தியத்தை அந்தச் சமயத்தில் கூட வியக்காமல் இருக்கமுடியவில்லை. வண்டியிலிருந்து குதித்துவிட்டேன். -

  • பிறகு அவள் எப்படியானாள் என்று எனக்குத் தெரியாது. அத்துடன் அவளை மறந்துபோனேன்.”

涤 淡 淑 'பிறகு என்ன கடந்தது?' என்று அவனின்று பிரிந்த அது கேட்டது. மார்பைப் பக் கென்று அடைக்க ஆரம் பித்துவிட்டது. இடுப்பு வரை உடல் செத்துவிட்டது அவனுக்கே தெரிந்தது. "பிறகு எங்கே போனாய்? சுருக்கச் சொல். உனக்கு நேரமில்லை-சுருக்கச்சொல்-' "எங்கெங்கோ போனேன். என்னென்னவோ செய்தேன்; கடலையும் தாண்டினேன்; எத்தனையோ பேர்