பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}<! புற்று எஉன் செளகரியத்திற்காக, அவளைக் கெடுக்கவும் துணிந்தாய் அல்லவா?”

  • # #

"ஆம் 'அவளை உன் கருவியாய் உபயோகித்துக் கொள்ள எண்ணிவிட்டாய் அல்லவா!' "ஆம்-' "ஆகையால்தான், நீ அவளைக் கெடுக்குமுன் அதாவது நீ கெட்டுப் போகுமுன், உன்னை கான் என் னிடம் அழைத்துக்கொண்டுவிட்டேன்-' அவனின்றும் பிரிந்த அது திடீரென்று பெரிதாக ஆரம் பித்தது. "மகனே-என்னிடம் நீ உண்மையை ஒப்புக் கொண் டாய். எங்கெங்கோ ஒடியாடிக் களைத்து வந்தாய். இனி ே என்னிடம் இளைப்பாற வேண்டும்- அவன் மேல் இருள அது ஆரம்பித்தது.

      1. tufrir?" "

தப்பிப்போகும் நினைவின் முழுப்பலமும், அவன் உடலின் பலமும் அக்கடைசிக் கேள்வியில் பிரதி பலித்தன. அது இதற்குள் அவனுக்கும் அதற்கும்கூட வித்தி யாசம் தெரியாதபடி வியாபித்துவிட்டது. 'நீ எங்கிருந்து வந்தாயோ, அங்கே திரும்பிப் போகும் இடம் என்று வைத்துக்கொள்ளேன். நீ பாம்பா னால், உன்னை விழுங்கும் பெரிய பாம்பு என்றுதான் வைத்துக்கொள்ளேன். அல்லது கருடன் என்று வைத்துக் கொள்ளேன். எந்தப் புற்றின் இருளுடன் இழைந்துவிட வேண்டுமென்று : ஒரு சமயம் விரும்பினாயோ, அந்த