பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்ா. சி. ரா. 107 இன்னும் பின் தலைமுறைக்கு, இந்தக்கதை escapist fantasy, fasytale Graër P GGT 6är so னாலும் ஆச்சரியமில்லை. தனிவளை தோண்டி வேர்களைக் கெல்லுவதற்கும், முதுகெலும்பை முறிப்பதற்கும் இருக்கவேயிருக்கிறது காலம். அதன்மேல் பழியைப்போடு. 'குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் ல கடிமி, உச்சஸ்ரவஸ், ஐராவதம் எல்லாம் உண் டாயின. ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாயிற்று. உடனுக்கு அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான். தொகுதி : பச்சைக் கனவு நமஸ்காரம். கேஷமம். கேrமத்திற்கு எழுத வேணு மாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க, சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் காணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப்போகிறீர்கள்? அதனால் நானே முக்திக் கொண்ட தாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருக் தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா?ஆம்படையானுக்குக் கடிதாசு எழுதிக்கறாள்!" என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத்திலிடிக்காமல், தன் கன்னத்திலேயே இடித்துக்கொண்டு, ஏளனம் பண்ணலாம்! பண்ணினால்