பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்க்கவி ஸ்ருதி பிசகாமல் இருந்தால், சுயப்ரக்ஞை பிதற்ற வில்லை என்று தெரிகிறது. அதுவே சரி, ஸ்ருதியே கதையைத் தாங்கிக்கொண்டு போகி தி.தி. தொகுதி ! இதழ்கள் 'பார்க்கவி! பார்க்கவி!!’ பார்க்கவி அசைந்துகூடக் கொடுக்கவில்லை. தலையணை மீது ஐந்து தலை நாகம் படம் விரித்தாற் போல் கூந்தல் ஐந்து பிரிகளாய் அவிழ்க்து அலை மோதிற்று. 'அடி நாட்டுப் பெண்ணே!' (நாறப் பொண்னே!) பார்க்கவி மல்லாந்து படுத்தபடி கால் கட்டைவிரலி லிருந்து கழுத்து வரை தன் உடலைக் கண்ணோட்டம் விட முயன்றாள். தாக்கத்தில் மேலாக்கு இடுப்புவரை இறங்கி விட்டது. ஆனால் இன்னும் அவள் சரி பண்ணிக்கொள்ள ஆரம்பிக்கக்கூட இல்லை. இப்பொழுது கிடக்கையில் அங்கங்கள் தளர்ந்து வீழ்ந்து கிடக்கும் இதவில் ஒரு விரலைக்கூட அசைக்க மனமில்லை. அடீ ராணியம்மா காப்பி கலந்தாச்சு. எழுந்திருக்க மனசு பண்ணலாமே!' கரும் பலகையில் ஆணியால் கோடு இழுத்தாற்போல் கிறிச்சிட்டு, கீழிருந்து அக்குரல் எட்டிற்று. பார்க்கவிக்குச் செவி நரம்புகள் துடித்தன. பல்லைக் கடித்துக் கண்களை இறுக முடிக் கொண்டாள். இன்னிக்கு என்ன வேணு