பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நம்: 'வாட் ஈஸ் கோயிங் ஆன் ஹியர் குரலின் இடிதான் என்மேல் முதலில் விழுந்தது. வார்த்தைகள் பின்னால், 'ஸ்டாண்ட அட! எழுந்து பின்றேன். அம்ருதாஞ்சன் பொம்ம்ை மாதிரி என் செயல் என்னிட மில்லை. -

  • சுப் வித் மி'

என்னைக் கையைப் பிடித்துக் கையும் பிடியுமாக இழுத்துச் சென்றார். எல்லோரும் என்னைப் பார்க்கிறார் கள், கம்பி தவிர, பேப்பரில் என்னவோ அப்படி தலை குனிந்து முனைந்திருந்தான். அப்புறமே இன்றுதான். இன்று என்று சொல்வதா நேற்று என்று சொல்வதா, கிழக்கில் சாம்பல் பூக்க ஆரம்பித்து விட்டது. இன்றுதான் கம்பி முகம் பார்த் தேன். அன்றிலிருந்து இன்று வரை மண்டையைக் குடைந்து கொள்கிறேன். சரியான முன்யோசனையுடன்தான் செய் திருக்கிறான். நான் அகப்பட்டுக் கொள்ள வேண்டும் என் கிற எண்ணம் அவனுக்கு இருந்திருக்குமோ இல்லையோ? தான் மாட்டிக் கொள்ளக்கூடாது. அவன் பர்க்ஷையில் என்னவானானோ கினைத்தபடி கடத்திக் கொண்டு விட்டான். அவனுக்கு எப்பவும் மார்ச், செம்டம்பர் மாறி மாறி இருக்கிறது. சித்தப்பா கடிதம்போட்டு, அப்பா வந்து என்னை அழைத்துக்கொண்டு போய்விட்டார். - அடுத்த வார்த்துக்குள் சித்தப்பர் இடமே மாறி, ஆதம்பாக்கத்துக்கு குடித்தனம் போய்விட்டார். திருவல்லிக் கேணியில் எங்கள் சுற்று வட்டாரமே பற்றி எரிகிறதே.