பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தாயம் அப்புறம் எனக்கு வீடே கிலி ஆயிடுத்து. எந்த சமயத் தில் என்ன பண்ணுவாளோ என்கிற பயத்தோடு அங்கே என்னால் வாழ முடியல்லே. வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். அன்னி தாயக்கட்டானை ஆயுளுக்கும் என்னால் மறக்க முடியாது. அது தாயக்கட்டானே அல்ல. நான் மாட்டிக் கொண்டு, இன்னமும் வெளியேற முடியாமல் தவிக்கும் சிலந்திவலை! ரவி, நீ இப்போ சொல்லனும்" என் கைகளைப் பற்றிக் கொண்டான். 'நான் பிரம்ம சாரியா, கல்யாணமாகாதவனா?” அவன் விழிகளைப் பார்க்க சகிக்கவில்லை. தலை குனிந்தேன். தாரகராமன் இறந்து அவன் அதிக காளில்லை. ஆறு மாதங்களுக்குள் ஒருநாள்-ஒரேநாள் ஜூரம்...நான்தான் கொள்ளி இட்டேன். அப்படித்தான் அவன் கடைசி இஷ்டம், ஆயுளுக்கும் கிளைக்க முடியாதபடி பஸ்பமாகி விட்ட வனுக்கு என் கொள்ளி அதிகப்படி அதனால்தான் அவன் இஷ்டம் அப்படியோ? - တို် & છઠ 嫂.畿系}阁 。 “ஹல்லோ, உமா ஸ்பீக்கிங்...அங்கே யாரு? ஒ ராதா என்ன விசேஷம்? ஒl கோ, தாங்க்யூ. Don't fee like it, Not in the mood, sorry, some other time...Qautifu Guom 2 Bye; Bye... 'ஷாப்பிங்காம்...' I hate shopping. I hate T. V. I hate pictures.