3.18 கறந்த பால்
பாள்? காவிரியில் அகப்பட்டமையால் இவள் பூர்வோத் திரம், இந்த வட்டாரம் தான் என்று கொள்ள முடியுமா? இவள் பிரயாணம் இமயத்தில் ஆர்ம்பித்து, விந்தியம் தாண்டி ஏன் வந்திருக்க முடியாது? அதுவும் எத்தனை காள் பயணமோ? ஒரு நாளா, ஒரு வருடமா, எத்தனை ஆயுசுக்களோ? இவளை வடித்த சிற்பி எந்தக் காலம்? உண்மையில் இவள் வடித்தவளா? கித்யத்துவத்தின் அலைகள் ஒன்றில் சவாரி செய்துவந்து...
பாஸ்கர் மூர்ச்சையானார். பாஸ்கர் அப்படி ஒன்றும் கற்பனா சக்தி படைத்தவர் அல்லர். ஆகையால் இது போன்ற சிந்தனை, சிந்தனையினின்று தோற்றங்கள், தன்னிடமிருந்து எழுந்தன, எழக்கூடியவை என்பதை அவரால் தாங்கக்கூடியதாக இல்லை. முதலில் அவை அவ ருடையதா? இல்லை; அவள் வைக்கும் பொறி.
திடீரென்று பாஸ்கருக்கு உடல் பரபரத்தது. அடுத்த தருணம் ஏதோ அமானுஷ்யம், ஆச்சர்யம் கிகழப்போவது போன்ற உணர்வு. தியானத்தில் மூடியிருக்கும் அவள் கண்கள் திறக்கப்போகின்றனவா? உடல் கடுங்க குத்து விளக்கைத் தூக்கி விக்ரஹத்தின் முகத்துக்கெதிரே பிடித் தார். புன்னகையின் அரும்புதான் விரிந்திருந்தது.
பாஸ்கர் மாரைப் பிடித்துக் கொண்டார். அவள் கண் திறந்தால் நிச்சயம் என்னால் தாங்க முடியாது. விக்ர ஹத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, பாஸ்கர் கங்கோத்ரி யிலேயே ஸ்னானம் செய்தார். இங்கு இரு மலைச் சாரல் களிடையே குழந்தைபோல் தவழ்கிறாள். பின்னால்தான். அல்லது முன்னாலா? சங்கரரின் சடைமுடியே இலக்கான உக்ரஹம். அடுத்து மானசரோவர் ஏரி. ஹரித்வாரில் கங்கை யின் குளிரே முதல் தொடலில் நெருப்பாய்ச் சுட்டது. அடுத்து, யமுனையின் சுழித்த கொந்தளிப்பில் திணறினார்.
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/231
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
