பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 கறங் த பால் மனம் தெய்வ ஆராதனையில் முனைந்தவுடன் கடைகண்ணி, வீட்டு வேலை, நிர்வாகம் படிப்படியாக அவள் பங்குக்குச் சேர்ந்து விட்டது. அதனால் என்ன? இந்த நாளில் தான் பாதிக்கு மேல் ஆண்பிள்ளை வேலைகளை பெண்கள் தானே கவனித்துக் கொள்கிறார்களே, தாங்களும் உத்யோகமும் பண்ணிக் கொண்டு அவள்பாட்டுக்குப் போவாள், வருவாள். எங்கு போனாய், ஏன் போனாய், எப்போ திரும்புவாய்-கேட்க ம்ாட்டார். பாஸ்கர் சுபாவம் அப்படி, அவளும் தானாக, போன வங்த விவரங்களைச் சொல்லமாட்டாள். தேவை யில்லை. அனேகமாக இன்றைய எல்லாக் குடும்பங்களும் இப்படித்தானே கடக்கின்றன? அதில்கூடப் புதுமை எது? ரேனு ரோசத்தைப்பற்றி அல்லவா கேள்வி அநேக மாகக் கேள்விக்குப் பதில் ப்ளாங்கி தான். அண்டைவீட்டு எதிர்வீட்டு சகவாசம் என்று ரேணு கொண்டாடுவதில்லை. அவளைத் தேடி வரும்படியாகவும் வைத்துக்கொள்வ தில்லை. தனி ஜீவி? கிட்டத்தட்ட அப்படித்தான். மழுங் குணி மாங்கட்டை அழுத்தக்காரி? ஆபத்தான கேள்வி. என்னைக் கேட்டால் மைக்கேன் பாடு என்று இருந் தாளா? இருக்கலாம். நமக்கேன் பாடு என்பதே நடை முறைத் தத்துவமாக இக்காளில் விளங்குகிறது. ஒரு நாள் வாடிக்கை பால்காரக் கிழவன் (எருமைப் பால்) வந்தான். சாமி, இன்னிக்கு சாயந்திரம் பசுமாடு வீட்டுக்கு கொண்டு வந்து கறக்கறேன். ஒருவேளை தான். வாடிக்கைக்கார சேட் பம்பாய் போயிருக்கார். நாளை ப்ளேனில் திரும்பிவிடுவார். இஷ்டமா? ஒரு வேளைதான்.' கிடைத்தவரை லாபம். பரவாயில்லை. ஒண்ணரை லிட்டர் கறக்கும் ஜாதி மாடு. பால் தடிப்புத்தான்.'