பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. உத்தராயணம் கிறாளோ அத்தனையும் வாங்கியாகிறது. இன்று அமுங் கினாற்போல் இருந்தது; களைக் காலை எழுந்து கண்ணாடியில் பார்த்தால் கிளைத்திருக்கிறது; உடனே உற்சாகம், அடுத்து உடனே அயர்வு. கொஞ்ச காட்களாய் அவள் காலம் இப்படித்தான் தள்ளுகிறது. ஆயினும் பரந்த முகத்தில் பேரழகு ஒன்று உண்டு. விடிவேளையின் அயர்த்தலில் கண்டது தோற்றம்: இதன் தெளிந்த கிழல்தானோ? கையை ஆட்டிவிட்டு சாக்தா இறங்கிப் போயாச்சு. கீழ்வானத்தில் பெரிய யாகம் கடந்து கொண்டிருக் கிறது. மேகப்பாறைகள் நெகிழ்ந்து உடைந்து கரைந்து, ஆஹாதியில் கவிழ்கின்றன. தழல் ஆட்டம், வான் பூரா பரவுகிறது. சூடு உரைக்கவே நானும் எழுந்து இறங்கு கிறேன். ஏணியிலிருந்து கால் தரையிலிறங்கினதுமே சுருக்' பல்லுக்கிடையில் தோன்றிய சாபத்தைக் கடித்து விழுங்கு கிறேன். சேகரின் உபயம். பொழுது போகவில்லை. சொல் லச் சொல்ல வேளையோடும், வேளையில்லாமலும் முள் வேலிக்கு முடி வெட்டி (அவன்முடி சொல்லச் சொல்லத் தோளில் புரள்கிறது) மீசை ஒதுக்கி, வெட்டி வீழ்த்தித்ய முள்ளை வென்னிரடுப்புக்காக, ஏணியடியில் சுவரோரம் சேர்த்து வைத்திருக்கிறான். வெய்யிலில் காய்வதற்காகத் தட்டிக் கொட்டிப் பரப்பி வைத்திருக்கிறான். வென்னிரடுப் புக்கும் அதை எரிக்கப் போவதில்லை. எனக்குத் தெரியும். முள்ளைக் கையில் குத்திக்கொள்ளாமல் எரிக்கத் தனிப் பொறுமை சிரத்தை, Knack வேண்டும். கிணற்றடியில் வாழை இலைகள் காற்றில் கர்த்தன. மாடி வரவேற்கின்றன. சத்தியமா (விட்டேன்) அவை