பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@存。ウF。 TT・ き。5 என்னை அடையாளம் கண்டுகொண்டுதான் அப்படிச் செய் கின்றன. மாலையில் ஒன்றிரண்டு வாளிகள் நான் இழுத் துக் கொட்டுவதைக் கொண்டு, இலை ஒவ்வொன்றும் ஆள் படுக்கலாம். அல்ல பாவாடை கட்டிக்கலாம். என்ன ஜாதியோ தெரியவில்லை. தாருக்கு இன்னும் எத்தனை நாள் போகனுமோ? எங்களை இலையைத் தொடக் கூடாதுன்னு பழியா விக்கறேள், மத்யானம் பாருங்கோ பாளம் பாளமாச் காத்து கிழிச்சுடறதே, என்ன சொல்றேள்? காற்றுக்கு அலங்கோலமாக அதற்கு இஷ்டம், அதற் காக உன் கத்திக்கிரையாகக் காத்திருக்குமா? -நான் சொல்லவில்லை, வாய்திறந்து சொல்லி விட்டால் பந்து என்மேலேயே திரும்பி வந்து மோதும். பிராம்மணனுக்கு வயசுக்கேத்த பேச்சா இருக்கா பாரு!' கண்ட கனவுக்கேற்ற வயது கடந்து எத்தனையோ வயதாகிவிட்டபோதிலும் வயதுக்கேற்ற கனவு என்று காண வருமோ? நடுப்பிள்ளையும் அடுத்தவனும் பல் தேய்த்துக் கொண்டிருக்கிறான்கள். 'இந்த شنباتاته ஒரு பேஸ்டா, மண்ணா, ஒண்னு உண்டா? எப்பவும் மாசக்கடைசிதானா?” 'ஏன், மண் இருக்கே,' இவனுக்கு அவன், அவனுக்கு இவன், சமயத்துக் கேற்ப ஒருவனுக்கு ஒருவன் உடுக்கடி, இவர்கள் பாஷையில் ‘Boss’,