பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்ா. ச. ரா. క్రా? கண்ணால் பேசிக் கொண்டிருக்கிறாய். பேசுகிறாயா சுட்டெ ரிக்கிறாய். ஒரு கதவை மூடி விட்டு இன்னொரு கதவைத். திறந்து விடுகிறாய். அவ்வளவு தானே! இப்படிக் கண்ணால் கரிப்பதற்குப் பதிலாக வாயைத் திறந்து எங் களைத்திட்டிவிடலாம். ஆமாம் காங்கள் கொம்மாளம் தான் அடிப்போம். ரேடியோ சில்ோன் தான் கேட்போம். முழு வால்யூமில்தான் முடுக்கி விடுவோம். சினிமாப் பேச்சுத்தான் பேக்வோம். நீ பொறுத்துண்டு தானிருக்கனும். இல்லாட்டி இதென்ன மெளனம்? உனக்கு கதரினன்னா'ன்னா எங் களுக்கு லலலலா. காங்கள் யோ? வேலையும் கிடைக்க மாட்டேன்கிறது. எங்களுக்குப் பொழுது போக்குக்கு என்னதான் வழி? வீட்டுக்குவீடு போய்ப் பாருங்கள். சத்தம் உங்களுக்கு B.F. எங்கள் எங்கள் பீதிக்கு அதுதான் மறதி, வழித்துணை. கடன்வாங்கியோ, திருடியோ கலகலப்பாய் இன்னிக்கு இன்றையோடு போச்சா? நாளையை காங்கள் எங்கே கண்டோம்? உங்களுக்கு நாளை இருந்தது.' நான் பதில் பேசவில்லை. பேசுவதில்லை, பேச்சு நியாயம் எப்பவோ தாண்டியாச்சு. கண்ணன் அந்த நாளிலேயே செல்லம், கொடுத்த சலுகைகளுடன், தானாக எடுத்துக் கொண்ட உரிமைகளும் இப்போ சேர்ந்துவிட்டன. அவன் தம்பி மெளனமாய் எனக்கு விழும் சாட்டையடியைப் பார்த்துக்கொண்டு கிற்கிறான். Boss @6är hatchet man. நான் இன்னும் வெறுக்கவில்லை. ஆனால் இவர்கள் உலகத்தை வெறுத்தாச்சு. கட்ட பயிர் அம்புகளாய்க் காய்க்கிறது. சரப்படுக்கை யில் படுத்து, உன் உத்தராயணத்துக்குக் காத்திரு.

  • கிருஷ்ணா! அது எங்கே கிருஷ்ணா என்று கத்து கிறது? அருவருப்பான, அபஸ்வர அழுகையின் தேம்பல்