பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఇ} f s.j'", 莎3 'இல்லே, பட்டணத்துக்குப் புளைக்க வந்தோம்.' அந்த ஆள் ஆத்திரத்துடன் பீடியை விசிறி எறிக் தான, "ஆமாய்யா, வெளியூரிலே இருக்கிறவன் புளைக் கறத்துக்குப் பட்டணத்துக்கு வந்துடுங்க. பட்டணத் திலேயே இருக்கிறவன் பட்டினி கிடக்கட்டும் ஊரிலே இருக்கிறவனுக்கு இடமில்லை; வந்துடராங்க வரிஞ்சு கட்டிக்கினு-புளைக்கறத்துக்கு.” மனுசனுக்கு மனுசன் ஏன் இப்படி இருக்குதுன்னு புரியல்லே. யார் யாருக்குத் தீங்கு இளைச்சுட்டது என்ன? அவன் யாரே நான் யாரோ, இவனுக்கு என் மேலே என்னத்துக்குக் கோவம்? இந்த மாதிரி இடத்துலே தன்னக் தனியா மாட்டிக்கிட்டு எப்படிப் புளைக்கறது: ஊரிலே ஒரு மாதிரி கஷ்டமின்னா, ஒண்டவந்த இடம் இப்படி இருக்குது. துணையுமில்லே, துப்புமில்லே. ஒண்னும் புரியவும் மாட்டேன்னுதே......' அவன்படும் வேதனையும் குழந்தையின் ஓயாத அழுகை யும் ஆத்திரத்தைத்தான் விளைவித்தன. இதும் களுத்தை முறிச்சுப் போட்டுடவா? ஒரு வளியா ஒளிஞ்சுது ஒரு தொந்தரவு...... 扮 போனா போனா, காலைலே - போனா-புடிக்கப் போன வேலையை வேரோடு புடிங்கிக்கிட்டு வந்துடற மாதிரி-என்னடாது ஆண்புள்ளெகிட்டே குளந்தையை விட்டுட்டுப் போனமே, வேளா வேளைக்கு அவன் என்ன பண்ணுவானின்னு கெஞ்சிலே பயமிருக்கனும். ஊரைச் சுத்தனும்னா போதும் இந்தப் பொம்புளெங்களுக்கே...? அவன் பொருமிக் கொண்டிருக்கையிலே கிழல் வாசம் படியில் தட்டியது.