பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a)ir。 李・ ffe 6? குழந்தையைப் பார்த்தவுடனேயே அவனுக்குத் தெரிந்து போய்விட்டது. அதற்கு மூச்சு சத்தம் போட ஆரம்பித்து விடடது, கொர்-கொர்' என்று. அவள் வயிற்றிலேயும் வாயிலேயும் அடித்துக்கொண்டு அழுகிறாள். ஆயினும் அவன் மனம் பளிங்கெனத் தெளிந்து சிந்திக்க ஆரம்பித்து. விட்டது. எல்லாம் பாரதயுத்தம் மாதிரிதான். ஊரிலே தரும் ராஜா கோவுல்லே காப்புக்கட்டி பாரதம் உபன்யாசம் வெச்சாங்களே-எல்லாரும் தோத்தாங்க. எல்லாரும் ஜெயிச்சாங்க. தோத்தவனும் கஷ்டப் பட்டான்; ஜெயிச்ச வனும் சொகப்படல்லே. என்னவோ காரியம் சாதிக்கிறாப் போல, சண்டை போட்டதிலே கொறைச்சலில்லே, நாள் பாத்ததிலே கொறைச்சலில்லே-பலி போட்டதிலே கொறைச்சலில்லே-அரவான் பலி!' -கொர்-கொர்-ர்-' மொதல்லே புளைக்கிற வளியைக் கண்டுட்ட மாதிரி குளங்தையைப் பலி வெச்சோம். அப்புறம் அதுக்குமேலே ஒசத்திக் காரியம் பண்றாப்போல சண்டையிலே போய் சேர்ந்தாச்சு. இனிமேல் தப்ப முடியாது. கைகாட்டுக் கொடுத்தாச்சு. நாளை மத்தியான வண்டிக்குப் புறப் படனும். அப்புறம் அந்த வண்டியிலே எங்கேபோய் தள்ள றானோ. போவாமே இருந்தோம்னா நாளைக்கு கைக்கு விலங்கோடே வந்துடுவான். பூட்டுமேல் பூட்டு. புளைக்கற வழி என்ன? சாவுற வழிதான். சண்டைக்குப் போய் சேர்ந்த சமாசாரத்தை இவ கிட்டே சொல்லலே. அது வேறே பாக்கியிருக்குது. குளக் தையைப் புதைச்சுட்டு வந்தப்புறம் இருக்குது அந்த ரகளை,